Thursday, August 16, 2007

மனித உரிமைகள் ஆனைக்குழுவில் மூவர் சரண்

கைதடி கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த மூவர் இன்று பகல் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக சரணடைந்துள்ளார்கள்.

கோப்பாயைச் சேர்ந்த இளம் குடம்பஸதர் ஒருவரும் மற்றும் 30 வயதான கைதடியைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தர் மற்றும் தனிமையில் வாழ்ந்த 48 வயதானவருமே இன்று மனித உரிமைகள் ஆனைக்குழுவில் சரணடைந்துள்ளவாகள். ஏற்கனவே இவர்களுடைய வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் வீடுகளை சோதனையிட்டுவிட்டு தேசிய அடையாள அட்டைகளை பெற்றுச் சென்றதாகவும் அதனைத் தொடர்ந்து இவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் சரணடைந்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் மூலம் யாழ் நீதிமன்றில் உரியவர்கள் சமர்ப்பிக்ப்பட்டடு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

No comments: