செல் சத்தத்தினால் இன்று காலை யாழ். குடாநாடு கடும் அதிhவுக்கு உள்ளாகியது. வுன்னியில் உள்ள புலிகளின் பகுதியில் இருந்து ஏவப்பட்ட செல்கள் பலாலி படைத்தளத்தில் வீழ்ந்து வெடித்ததைத் தொடாந்து இந்த தாக்குதலை படைத் தரப்பினர் நடத்தினர்.
நூற்றுக்கணக்கில் வன்னியை நோக்கி செல்கள் ஏவப்பட்டன. காலை 8.45 மணியளவில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி இராணுவ முகாம் பகுதியில் திடீரென செல்கள் வீழ்ந்து வெடித்தன. எனினும் இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.
வன்னியில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து சுமார் அரை மணித்தியாலங்களுக்கு மேலாக யாழ். குடாநாட்டில் இருந்து செல்கள் வன்னி நோக்கிப் பறந்தன. பலாலியில் இருந்து ஆட்லெறி மற்றும் பல் குழல் பீரங்கித் தாக்குதல்களும் இடம்பெற்றன. அது தவிர ஊரெழு தெல்லிப்பழை உடுவில் தென்மராட்சி முகாம்கள் வடமராட்சி முகாம்கள் என பல இடங்களில் இருந்தும் ஆட்லெறி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இருந்து பல்குழல் பீரங்கித்தாக்குதலும் இடம் பெற்றமையால் பொதுமக்கள் பெரும் பதற்றமடைந்தனர்.
இதேவேளை பலாலி படைத்தளத்தில் வீழ்ந்து வெடித்த செல்களினால் படைத்தரப்பினருக்குக் காயங்கள் எற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment