Friday, August 24, 2007

இராணுவ வாகண விபத்து: இருவர் வைத்திய சாலையில்

இன்று காலை இராணுவ வாகணமும் உந்துருளியம்; மோதிக்கொண்டதில் உந்துருளியில் வந்த இருவர் காயங்களுக்கு உள்ளாகினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

காங்கேசன்துறை வீதி, சபாபதிப்பிள்ளை முகாம் வீதிக்கு அருகாமையில் காலை 7.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. அவ்வழியால் வந்த அரச வாகனம் ஒன்றை மறித்த இராணுவத்தினர் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி தெரிவித்து விட்டுச் சென்றுவிட்டார்கள்.

இராணுவத்தினரின் இத்தகைய நடவடிக்கையினால் குறிப்பி;ட்ட சாரதி மிகவும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டார். காயங்களுக்கு உள்ளாகியவர்களுக்கு எதாவது நடந்தால் பொறுப்பக் கூறும் நிலைமை தனக்கு ஏற்படும் என்ற அச்சத்தில் சற்றுப் பயந்த சாரதி, பின்னர் அவர்களை வைத்தியசாலையில் சேர்த்தார்.

No comments: