Wednesday, August 29, 2007

சிறுவனை நாய் கடித்த விவகாரம்: நீதிமன்றம் வரை சென்றுள்ளது

மலசலகூடத்தை பார்வையிட வீட்டிற்கு வந்த பொது சுகாதர பரிசோதகரை பாதுகாப்பாக வீதியைக் கடந்து விட்டு வந்த பத்து வயது சிறுவனை ஆத்திர முற்ற நாய் கடித்து குதறிய சம்பவம் தெல்லிப்பழைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் வீடிற்கு அருகிலுள்ள வீட்டில் வளர்க்கப்படும் நாய் வீதியில் நின்று போய் வருபவர்களைக் கடித்தும் விரட்டியும் வருவது வழமை. தமது வீட்டிற்கு வந்த காரணமாக பொது சுகாதார பரிசோதகரை அந்த நாய் கடித்துவிடக்கூடாது என்ற கவனத்தில் வீட்டிற்க்கு வெளியே வந்து நாயைக் கடந்து அவர் செல்ல குறிப்பிட்ட சிறுவன் உதவி செய்துள்ளான்.

இதனைப் பார்த்துக் கொண்டு இருந்த நாய் சிறுவன் திரும்பி வீட்டிற்க்கு வந்தபோது அவனைத் துரத்திக் கடித்துக் குதறியுள்ளது. சிறுவன் உடலின் பல இடங்களிலும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறிப்பிட்ட விவகாரம் பொலிசாரின் மூலம் நீதிமன்றத்திற்;கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

No comments: