Wednesday, August 29, 2007

பாழ்பட்டுப் போகின்றது யாழ்ப்பாணம்: இராணுவ உதிவியுடன் தறிக்கப்படும் மரங்கள்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி ஓரங்களில் உள்ள பழைமை வாய்ந்த மரங்கள் தறித்து எடுத்துச் செல்லப்படுகின்றன. கடந்த சில நாட்களாக இந் நடவடிக்கையில் இராணுவத்தினருடன் இனைந்து இயங்கும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலத்தில் வீதியோரத்தில் உள்ள மரங்களின் கொப்புகள், வீட்டு வேலிகள் மற்றும் வீட்டு வளிவுகளில் உள்ள மரங்கள் எனப் பல பயன்தரு மரங்களும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இராணுவத்தினரின் பணிப்பின் பேரில் வெட்டப்பட்டன. அவைபோக எஞ்சியிருந்த வீதியோர மரங்களும் தற்போது தறிக்கப்படுகின்றன.

சுமார் 75 வருடங்களாக இந்த வீதியால் செல்வோருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்த மரங்களே தறித்து எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்தப் பழமையான இதனை தறிக்கப்படுவதைப் பல அரச உயர் அதிகாரிகள் பார்த்துக் கொண்டு செல்கின்றனர். எனினும் யாரும் அதற்கெதிராக நடவடிக்கையெடுக்காத பொறுப்பற்ற நிலமையே காணப்புடுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

இது சம்பந்தமாக பொது அமைப்புகள் உரிய அதிகாரிகளுக்கு முறையிட்டுள்ள போதிலும் அதற்கு யாரும் பொறுப்பான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தினருடன் இனைந்து குறிப்பி;ட்ட சிலர் பெறுமதிமிக்க மரங்களை தறித்து எடுத்துச் செல்வதற்கு மரக் கூட்டுத்தாபனத்தின் பொறுப்பான அதிகாரிகளும் உடந்தை என்று பொது அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

No comments: