Friday, August 31, 2007

ஹென்றியரசர் நூற்றாண்டு விழா போட்டி: ஏழாலை ஞான முருகன் அணி வெற்றி

யாழ்ப்பாணம் இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக இளவாலை யங் கென்றிசியன் விளையாட்டுக் கழகம் நடத்திய நூற்றாண்டு விழா நினைவுக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஏழாலை ஞான முருகன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

புனித கென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இறுதிப் போட்டியில் ஏழாலை மயிலங்காடு ஞான முருகன் விளையாட்டுக் கழகமும் யாழ்ப்பாணம் பாடும் மீன் விளையாட்டுக் கழகமும் மோதின.
முதல் பாhதி ஆட்டத்தின்போது ஞான முருகன் விளையாட்டுக் கழகம் ஒரு கோலைப் பெற்ற போதிலும் அதனை மத்தியஸ்தர் பிழையான பக்கத்தில் நின்று பெற்ற கோல் எனத் தெரிவித்து மறுத்தார்.

இந் நிலமையில் முதல் பாதி ஆட்டம் கோல்கள் எதனையும் பெறாத நிலையில் ஆட்டம் முடிவடைந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பமாகிய சில நிமிட இடைவேளையில் ஞான முருகன் விளையாட்டுக் கழகம் ஒரு கோலைப் பெற்று முன்னிலை பெற்றது.

இரு அணிகளும் தொடர்ந்து கோல்கள் பெறும் பெரு முயற்சியில் ஈடுபட்ட போதிலும் கோல்கள் எதனையும் பெறவில்லை. ஞான முருகன் விளையாட்டுக் கழகம் 01 - 00 என்ற கோல்கணக்கி;ல் வெற்றிபெற்று சம்பியனாகியது. நூற்றாண்டு விழா சுற்றுக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.

No comments: