இரு வாரத்தில் சுமார் நான்கு இலட்சம் மக்களை விசேட அடையாள அட்டை பெற வேண்டும் என யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவம் நச்சரித்து வருகின்றது. இது தொடர்பாக மக்களுக்ககு எச்சரிக்கையுடன் கூடிய வற்புறத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடும்ப அட்டை பெறவேண்டும் என இராணுவம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சுமார் நூறு ரூபா வரை செலவிட்டு குடும்ப அட்டை பெற்று வருகின்றனர். அந்த நடவடிக்கை முடியும் முன்னர் மீண்டும் விசேட அடையாள அட்டையை பெற வெண்டும் என இராணுவத்தினர் பணித்துள்ளார்கள்.
தொழில் இழந்து சிரமப்பட்டுக் கொண்டு அரச நிவாரணத்திற்க்கு கையேந்தி நிற்கும் மக்களைத் தொடர்ந்தும் பணச்செலவு செய்ய இராணுவம் தூண்டி வருவதானது மனிதாபிமானமற்ற் செயல் எனப் பலரும் கூறுகின்றார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment