இணுவிலில் கிளைமோர்: இளைஞன் காயம்
இணுவிலில் இன்று காலை கிளைமோர் வெடித்ததில் இளைஞர் ஒருவரின் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டன என்று யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. காலை 9. 00 மணியளவில் இந்தச் சம்பவம் காரைக்கால் சிவன்கோவிலுக்கு அண்மையாக இடம்பெற்றுள்ளது.
காலையில் வீதியால் வந்த இளைஞரே கிளைமோருக்கு இலக்காகியுள்ளார். காயமடைந்த இளைஞர் வீதியில் மயக்கமுற்ற நிலையில் இரத்தப் வெள்ளத்தில் கிடந்தார் எனவும் -
கிளைமோர் வெடித்த சத்தத்தைக்கேட்டு குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த படையினர் அந்த இளைஞரைக் கொண்டு சென்றனர் என்றும் - அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோரை எடுக்க முற்பட்ட வேளையே அது வெடித்தது என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். பக்கச்சார்பற்ற தகவல்கள் இதனை ஊர்ஜிதப்படுத்தவில்லை.
அராலி இந்துக் கல்லூரி சம்பியன்
சங்கானை கல்விக்கோட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே இடம்பெற்ற 16 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் அராலி இந்துக் கல்லூரி சம்பியனாகியுள்ளது.
சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி மைதானத்தில் சங்கானை கல்விக்கோட்ட பணிப்பாளர் துரை எங்கரசு தலைமையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியும் அராலி இந்துக் கல்லூரியும் மோதின.
முதல் பாதி ஆட்டத்தில் அராலி இந்துக் கல்லூரி ஒரு கோலைப் பெற்று முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாத நிலையில் அராலி இந்துக் கல்லூரி 16 வயதுப் பிரிவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியை 01 க்கு 00 என்ற கோல்கணக்கில் வெற்றி கொண்டு சங்கானைக்கோட்ட சம்பியனாகியது.
முறைகேடான ஆட்டம்
18 வயதுப் பிரிவினருக்கான இறுதிப் போட்டியில் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியும் அராலி இந்துக் கல்லூரியும் மோதிக் கொண்டன. இதில் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் ஆட்டம் நிறைவுபெற்றது.
முதல் பாதி ஆட்டத்தில் அராலி இந்துக் கல்லூரி வீரர்கள் இருவர் தமது மேலங்கியை கழற்றி மைதானத்தில் சுழற்றியமைக்காக மத்தியஸ்தரினால் மஞ்சல் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டார்கள்.
இந்த நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் அராலி இந்துக் கல்லூரி வீரர்கள் இருவர் ஒரே சமயத்தில் தண்டனை எல்லைப் பகுதிக்குள் முறைகேடாக விளையாடினர். எதிரணி வீரரை அவர்களில் ஒருவர் காலால் உதைக்க மற்றவர் பந்தை கையால் தட்டினார்.
இதனை அவதானித்த மத்தியஸ்தர் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி அணிக்கு தண்டனை உதைக்குரிய வாய்ப்பை அளித்தார். அதனை ஏற்க்க மறுத்த அராலி இந்துக் கல்லூரி அணியினர் தொடர்ந்து விளையாடவும் எதிர்ப்புத் தெரிவித்து மைதானத்தில் இருந்தனர். இதனை அடுத்து ஆட்டம் முடிவடைந்ததாக அறிவித்த நடுவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இதனால் 18 வயதுப் பிரிவினருக்கான கேடயத்தை வட்டுக்கோட்டை மத்திய கல்லூரிக்கு பிரதம விருந்தினர் ஓய்வுபெற்ற தென்மராட்சி உடற்கல்விப் உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.லோகநாதன் வழங்கி கௌரவித்தார்.
சித்தன்கோணியில் தொடர் பதற்றம்
சித்தன்கேணிச் சந்தியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலைத் அடுத்து அந்தப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான நிலைமை இன்றுடன் மூன்றாவது நாளாகவும் காணப்படுகின்றது.
அந்தப் பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் வீதியால் செல்லும் வாகணங்களை மறிப்பதும் இளைஞர்களைத் தாக்குவதுமாக அராஜகம் செய்தபடி இருக்கின்றனர் குறிப்பாக வர்த்தக நிலையங்கள் முழுமையாகத் திறந்து இயங்காத நிலைமையே இன்றும் காணப்படுகின்றது. அத்துடன் வீதியால் செல்லும் பொதுமக்கள், அரச ஊழியர்கள் என்ற வேறுபாடுகள் இன்றி அனைவரையும் வீதியில் உள்ள புற்கள் பற்றைகளைத் துப்புரவு செய்யும்படியும் மரங்களை வெட்டும்படியும் வற்புறுத்தி வேலை வாங்கி வருகின்றனர் இராணுவத்தினர்.
இதன் காரணமாக பலரும் பிரதான வீதிகளைப் பயன்படுத்துவதை தவிர்த்து ஒழுங்கைகள் ஊடாக பயணம் செய்து வருகின்றார்கள். இதையறிந்து தற்போது சங்கானை டச்சு வீதியிலும் இராணுவத்தினர் நின்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்த வீதியால் செல்லும் மக்கள் அவ்வப்போது தாக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தினர் விபரம் பெற்ற பின்னரே
யாழ்ப்பாணத்தில் பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல்
யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களது குடும்ப விபரங்கள், ஆதரிக்கும் கட்சி, தொலைபேசி இலக்கம், கல்வித்தகமை, தொழில் போன்ற விபரங்களை அண்மையில் இராணுவத்தினர் பெற்ற பின்னரே மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சட்டத்தரனிகளுக்கு அச்சுறுத்தல்கள் விடப்படுகின்றன என்றும் -
கப்பம் கேட்டல் மற்றும் கொலைப் பயமுறுத்தல் விடுத்தல் போன்ற நடவடிக்கைகள் இடம் பெறுவதாகவும் - பரவலாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ். மாவட்ட சட்டத்தரனிகள் கடந்த வாரம் தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டார்கள். எனினும் இவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நீதிமன்றக் கடமைக்குத் திரும்பியுள்ளனர். இருந்தபோதிலும் தமக்கு எந்தநேரமும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற ஆதங்கத்துடனேயே அவர்கள் இருக்கிறார்கள்.
Friday, September 28, 2007
Monday, September 24, 2007
உலக சமாதான தின நிகழ்வு

யாழ். செயற்பாட்டு மையத்தினால் உலக சமாதான தினமான செப்டெம்பர் 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சில நிகழ்வுகள் நடத்தப்பட்டன. செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகனின் சொற்பொழிவும் திருமறைக் கலாமன்றத்தினரின் நடன நிகழ்வும் பிரபல இசைக் கலைஞரும் விரிவுரையாளருமான த.றொபேட்டின் அமைதி இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன. மல்லாகம் மாவட்ட நீதிபதி சரோஜினி இளங்கோவன் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மனித உரிமைகள் ஆனைக்குழுவில் இருவர் சரண்
மனித உரிமைகள் அலுவலகத்தில் மேலும் இருவர் கடந்த 20ஆம் திகதி சரணடைந்துள்ளனர். தமது உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியே அவர்கள் சரண் அடைந்துள்ளார்கள் மீசாலையைச் சேர்ந்த 33 வயதான குடும்பஸ்தர் ஒருவரும் கொக்குவிலைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருமே சரணடைந்தவர்களாவர்.
இராணுவப் பலனாய்வாளர்கள் மற்றும் ஆயுதக் குழுவினர் ஆகியோரின் அச்சுறுத்தல் காரணமாக அண்மைக்காலமாகப் பொதுமக்கள் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் சரணடைந்து வருகின்றார்கள். உலகில் எங்கும் இல்லாத வகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சரணடைந்த இருவரும் மனித உரிமைகள் ஆனைக்குழ அலுவலகத்தினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தி;ன் முன்நிறுத்திய பொலிஸார் சிறையில் அடைத்தனர்.
இராணுவப் பலனாய்வாளர்கள் மற்றும் ஆயுதக் குழுவினர் ஆகியோரின் அச்சுறுத்தல் காரணமாக அண்மைக்காலமாகப் பொதுமக்கள் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் சரணடைந்து வருகின்றார்கள். உலகில் எங்கும் இல்லாத வகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சரணடைந்த இருவரும் மனித உரிமைகள் ஆனைக்குழ அலுவலகத்தினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தி;ன் முன்நிறுத்திய பொலிஸார் சிறையில் அடைத்தனர்.
Saturday, September 15, 2007
ஊரடங்கு தளர்வு ஆனால் மக்கள் நடமாட்டம் இல்லை
யாழ். குடாநாட்டுக்கான இரவு நேர ஊரடங்குச் சட்டம் மேலும் மூன்று மணித்தியாலங்களினால் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் குடாநாட்டு மக்கள் இரவு நேரத்தில் நடமாடுவதைத் தவிர்த்து வருகிறார்கள்.
இரவு நேரத்தில் நடமாடினால் வழியில் ஏதாவது நடந்துவிடலாம் என்ற அச்சம் நிலவுவதே இதற்குக் காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். ஆட்கடத்தல்கள், இனம்தெரியாதவர்கள் என்ற பெயரில் இடம்பெறும் கொலைகள் போன்ற காரணங்களினால் மக்கள் இரவில் நடமாடுவதற்கு மக்கள் பயப்படுகின்றனர்.
இரவு நேரத்தில் நடமாடினால் வழியில் ஏதாவது நடந்துவிடலாம் என்ற அச்சம் நிலவுவதே இதற்குக் காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். ஆட்கடத்தல்கள், இனம்தெரியாதவர்கள் என்ற பெயரில் இடம்பெறும் கொலைகள் போன்ற காரணங்களினால் மக்கள் இரவில் நடமாடுவதற்கு மக்கள் பயப்படுகின்றனர்.
வீடுகளில் அத்து மிறிப் பிரவேசிக்கும் படையினர்
சுன்னாகம் பகுதிகளில் இரவு நேரத்தில் படையினர் வீடுகளுக்குள் அத்துமீறிப் பிரவேசித்து வருகின்றனர் என அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
வீட்டின் பூட்டிய கதவுகளை உடைத்தும் மற்றும் மதில்களின் மேலாகப் பாய்ந்தும் வரும் இராணுவத்தினரால் இருவு நேரத்தில் பொது மக்கள் அச்சத்துடனேயே வாழும் நிலைமை காணப்படுகின்றது.
இவர்கள் இரவு வேளைகளில் வாகனங்கள் மற்றும் உந்துருளிகளைப் பொதுமக்களிடமிருந்து கேட்கின்றனர் எனவும் கொடுக்க மறுப்பவர்களைப் பயமுறுத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. புடையினரின் இவ்வாறான நடவடிக்கைகளினால் திருடர்களும் விடுகளுக்குள் படையினர் போன்றே நுழைந்து திருடிச் செல்லும் நிலமையும் அதிகரித்திருக்கின்றது.
வீட்டின் பூட்டிய கதவுகளை உடைத்தும் மற்றும் மதில்களின் மேலாகப் பாய்ந்தும் வரும் இராணுவத்தினரால் இருவு நேரத்தில் பொது மக்கள் அச்சத்துடனேயே வாழும் நிலைமை காணப்படுகின்றது.
இவர்கள் இரவு வேளைகளில் வாகனங்கள் மற்றும் உந்துருளிகளைப் பொதுமக்களிடமிருந்து கேட்கின்றனர் எனவும் கொடுக்க மறுப்பவர்களைப் பயமுறுத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. புடையினரின் இவ்வாறான நடவடிக்கைகளினால் திருடர்களும் விடுகளுக்குள் படையினர் போன்றே நுழைந்து திருடிச் செல்லும் நிலமையும் அதிகரித்திருக்கின்றது.
கள்ளு விற்பனை நிலையத்தில் சாராயம் விற்றதற்கு தண்டம்
(ஹம்சப்பிரியா)
அனுமதிப்பத்திரம் பெறாது கள்ளு விற்பனை நிலையத்தில் அரச சாராயத்தை விற்பனை செய்த தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் மற்றும் சுன்னாகம் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கம் என்பவற்றிற்கு மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் தலா ஜம்பதாயிரம் ரூபா தண்டம் வித்திதது.
தெல்லிப்பளை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த இரண்டு சங்கங்களும் அனுமதிப்பத்திரம் இன்றி சாராயம் விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இரு சங்கங்களின் பிரதிநிதிகளும் குற்றத்தை ஒப்பக் கொண்டனர். வலிகாமம் பகுதியில் கடந்த சில வாரங்களாகப் பொலிஸார் சட்டவிரோத மது விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கையெடுத்து வருகின்றனர்.
அனுமதிப்பத்திரம் பெறாது கள்ளு விற்பனை நிலையத்தில் அரச சாராயத்தை விற்பனை செய்த தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் மற்றும் சுன்னாகம் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கம் என்பவற்றிற்கு மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் தலா ஜம்பதாயிரம் ரூபா தண்டம் வித்திதது.
தெல்லிப்பளை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த இரண்டு சங்கங்களும் அனுமதிப்பத்திரம் இன்றி சாராயம் விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இரு சங்கங்களின் பிரதிநிதிகளும் குற்றத்தை ஒப்பக் கொண்டனர். வலிகாமம் பகுதியில் கடந்த சில வாரங்களாகப் பொலிஸார் சட்டவிரோத மது விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கையெடுத்து வருகின்றனர்.
Monday, September 10, 2007
அமைதியாக நடந்த நல்லூர் கந்தசாமி கோயில் தேர்திருவிழா
நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. யாழ். குடாநாட்டில் கடந்த பல மாதங்களாகக் காணப்பட்ட ஊரடங்குச் சட்டம் நேற்றைய தினம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து; மக்கள் நேரத்துடன் ஆலயத்திற்க்கு வந்து திருவிழாவில் கலந்துகொண்டார்கள்.
அதிகாலையில் இடம்பெற்ற பள்ளியறைப் பூசையைத் தொடர்ந்து காலை 6.00 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் நடந்தது. அதனைத் தொடர்ந்து 7.00 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்தார். பக்தர்களின் பலத்த வேண்டுதல்களுக்கு மத்தியில் அடியார்களினால் தேர் இழுக்கப்பட்டது.
குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் முச்சக்கர வண்டிகள் யாழ்ப்பாணம் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள், சிற்றூர்திகள், என்பன காலை முதல் சேவையில் ஈடுபட்டு இருந்தன. தொடாச்சியாக அடியவர்கள் வருகை தந்து உடன் ஆலய சுற்றாடலில் இருந்தும் தமது வீடுகளுக்கு திரும்பிச் சென்றதையும் அவதானிகக முடிந்தது.
ஆலயத்தில் பல நூற்றுக்ககணக்கானவர்கள் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டதுடன் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நீணட ஆயுள் வெண்டி நேர்த்திகளை நிறை வேற்றியதையும் காணமுடிந்தது.
அதிகாலையில் இடம்பெற்ற பள்ளியறைப் பூசையைத் தொடர்ந்து காலை 6.00 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் நடந்தது. அதனைத் தொடர்ந்து 7.00 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்தார். பக்தர்களின் பலத்த வேண்டுதல்களுக்கு மத்தியில் அடியார்களினால் தேர் இழுக்கப்பட்டது.
குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் முச்சக்கர வண்டிகள் யாழ்ப்பாணம் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள், சிற்றூர்திகள், என்பன காலை முதல் சேவையில் ஈடுபட்டு இருந்தன. தொடாச்சியாக அடியவர்கள் வருகை தந்து உடன் ஆலய சுற்றாடலில் இருந்தும் தமது வீடுகளுக்கு திரும்பிச் சென்றதையும் அவதானிகக முடிந்தது.
ஆலயத்தில் பல நூற்றுக்ககணக்கானவர்கள் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டதுடன் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நீணட ஆயுள் வெண்டி நேர்த்திகளை நிறை வேற்றியதையும் காணமுடிந்தது.
குடிசன கணக்கெடுப்பு நிறுத்தம்
யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிசன கணக்கெடுப்பு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணியில் ஈடுபடுவதற்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் உரிய காகிதாதிகள் என்பன வழங்கப்பட்ட நிலையில் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
இந்தப் பணி நிறுத்தப்பட்டமைக்கான சரியான காரணம் எதுவும் யாருக்கும் தெரிய வரவில்லை. ஆனாலும் பணியில் ஈடுபட்டவர்களிடம் இருந்த உரிய காகதாதிகளை மீளக் கையளிக்கும்படி பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாக இப்பயிற்சி வகுப்புக்கச் சென்று கடமையை ஆரம்பித்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்தப் பணி நிறுத்தப்பட்டமைக்கான சரியான காரணம் எதுவும் யாருக்கும் தெரிய வரவில்லை. ஆனாலும் பணியில் ஈடுபட்டவர்களிடம் இருந்த உரிய காகதாதிகளை மீளக் கையளிக்கும்படி பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாக இப்பயிற்சி வகுப்புக்கச் சென்று கடமையை ஆரம்பித்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
விசேட அடையாள அட்டைப் பதிவுகள் மீண்டும் ஆரம்பம்
யாழ்ப்பாணத்தில் படையினரால் ஆரம்பிக்கப்பட்ட விசேட அடையாள அட்டைக்கான பதிவுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக விசேட அடையாள அட்டைக்கான பதிவுகள் திடீரென படைத்தரப்பினரால் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பதிவுகள் மேற்கொள்ளும் பணிகள் கிராம அலுவலர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிய படங்களுடன் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இராணுவத்தினர் தெரிவித்ததன் பெயரில் கிராம அலுவலர்களினால் இந்நடவடிக்கை மேற் கொள்ளப்படுகின்றது.
இதேவேளை சில பகுதிகளில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று பதிவுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். தென்மராட்சி, தீவகம், வடமராட்சிப் பகுதிகளிலும் இந் நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் இடம் பெறலாம் எனத் தெரியவருகின்றது.
உரிய படிவங்கள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டதைத் தொடாந்து இந்நடவடிக்கை இடம்பெறத் தொடங்கியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக விசேட அடையாள அட்டைக்கான பதிவுகள் திடீரென படைத்தரப்பினரால் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பதிவுகள் மேற்கொள்ளும் பணிகள் கிராம அலுவலர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிய படங்களுடன் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இராணுவத்தினர் தெரிவித்ததன் பெயரில் கிராம அலுவலர்களினால் இந்நடவடிக்கை மேற் கொள்ளப்படுகின்றது.
இதேவேளை சில பகுதிகளில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று பதிவுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். தென்மராட்சி, தீவகம், வடமராட்சிப் பகுதிகளிலும் இந் நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் இடம் பெறலாம் எனத் தெரியவருகின்றது.
உரிய படிவங்கள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டதைத் தொடாந்து இந்நடவடிக்கை இடம்பெறத் தொடங்கியுள்ளது.
Friday, September 7, 2007
விசேட அடையயாள அட்டை வழங்கும் பணி தற்காலி நிறுத்தம்.
கடந்த சில வாரங்களாக யாழ். குடாநாட்டு மக்களுக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கவதற்கான நடவடிக்கைகளில் யாழ். மாவட்ட படைகள் மும்மரமாக ஈடுபட்டு வந்தன. தற்போது இந்த விசேட அடையாள அட்டையை வழங்குவதில் படைத்தரப்புக்கு இடையே பெரும் குழப்பமான நிலமை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டதில் நிலை கொண்டுள்ள படையணிகள் பலவும் தக்கு தெரிந்தவாறு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் ஒரு கட்டமைப்பு அற்ற நிலமை காணப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்தாக தெரியவருகின்றது.
இதேவேளை ஏற்கனவே பல லட்சக்கணக்கான மக்கள் புகைப்படங்கள் எடுத்து இராணுவ முகாம்களில் பல மணித்தியாலங்கள் காத்திருந்து புகைப்படங்களை கையளித்தவிட்டு வந்துள்ளார்கள். இவர்களுக்குக் குறிப்பி;ட்ட விசேட அடையாள அட்டைக்கான படிவங்கள் வழங்கப்பட்டமைக்கான எந்தவொரு அத்தாட்சிக் கடிதங்களும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிட்டத்தக்கதாகும்.
யாழ். மாவட்டதில் நிலை கொண்டுள்ள படையணிகள் பலவும் தக்கு தெரிந்தவாறு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் ஒரு கட்டமைப்பு அற்ற நிலமை காணப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்தாக தெரியவருகின்றது.
இதேவேளை ஏற்கனவே பல லட்சக்கணக்கான மக்கள் புகைப்படங்கள் எடுத்து இராணுவ முகாம்களில் பல மணித்தியாலங்கள் காத்திருந்து புகைப்படங்களை கையளித்தவிட்டு வந்துள்ளார்கள். இவர்களுக்குக் குறிப்பி;ட்ட விசேட அடையாள அட்டைக்கான படிவங்கள் வழங்கப்பட்டமைக்கான எந்தவொரு அத்தாட்சிக் கடிதங்களும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிட்டத்தக்கதாகும்.
குடிசன மதிப்பீட்டு நடவடிக்கை ஆரம்பம்
யாழ். மாவட்டத்தில் குடிசன மதிப்பீடு எடுக்கும் பணிகள் மிகவம் மும்மரமாக முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு ஒழுங்கற்ற முறையில் இந்த செயல்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பி;டத்தக்கதாகும்.கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் பணிகளை முன்னெடுப்பதில் குறிப்பிட்ட சில பிரதேச செயலாளர்கள் உதவி அரசாங்க அதிபர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கதாகும்.
ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ள நிலமையில் இந்த குடிசன மதிப்பீடு என்பது திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் வாழ்வியலை அழிக்கும் நோக்கமாக அரசு இதனை மேற்கொண்டுள்ளதாக பொது அமைப்புகளும் கல்வியளார்களும் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.
தமிழ் மக்களுடைய வாழ்வியலை பல்வேறு வழிகளிலும் சிதைத்துவரும் அரசாங்கம் மற்றும் படைத்தரப்பினரும் அரச உயர் அதிகாரிகளும் இந்த படுபாதகமான செயலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் முயற்சிக்காக இதனை அவர்கள் இணைந்து மேற்கொள்வதாகப் பலரும் தெரிவிக்கின்றார்கள்.
ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ள நிலமையில் இந்த குடிசன மதிப்பீடு என்பது திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் வாழ்வியலை அழிக்கும் நோக்கமாக அரசு இதனை மேற்கொண்டுள்ளதாக பொது அமைப்புகளும் கல்வியளார்களும் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.
தமிழ் மக்களுடைய வாழ்வியலை பல்வேறு வழிகளிலும் சிதைத்துவரும் அரசாங்கம் மற்றும் படைத்தரப்பினரும் அரச உயர் அதிகாரிகளும் இந்த படுபாதகமான செயலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் முயற்சிக்காக இதனை அவர்கள் இணைந்து மேற்கொள்வதாகப் பலரும் தெரிவிக்கின்றார்கள்.
மீண்டும் மீண்டும் கசிப்பு விற்றவர் சிறையில்
கசிப்பு விற்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு தண்டப்பணம் கட்டிய மூன்றே மணிநேரத்தில் மீண்டும் குறிப்பிட்ட நபர் ஒருவரும் மற்றும் இருவரும் பெரும் தொகையான கசிப்பை ஆட்டோவில் எடுத்துச் சென்றபோது மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கசிப்பு விற்ற குற்றச்சாட்டில் அச்சுவேலியைச் சேர்ந்தவரான மயில் வாகணம் ஞானசேகரன் என்பவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் மாவட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் 15 ஆயிரம் ரூபா தண்டமாக கட்டிவிட்டுச் சென்றார்.
நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய சுமார் மூன்று மணிநேரத்தில் மேலும் இரண்டு நபர்களுடன் இனைந்து 45 போத்தில் கசிப்பை ஆட்டோவில் எடுத்துச்சென்ற போது சுன்னாகம் பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டு மல்லாகம் மாவட்ட நிதிமன்ற நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன் முன்னிலையில் நிறுத்தப்பட்டார். குற்றத்தை மூவரும் ஒப்புக் கொண்டார்கள்.
இதனைத் தொடாந்து 1ம் 3ம் குற்றவாளிகளான அச்சுவேலியைச் சண்முகம் ஸ்ரீதர், அன்னராசா குணேஸ்வரன் ஆகியோருக்கு 40 ஆயிரம் ருபா தண்டம் அல்லது 15 மாதா சிறைத்தண்டனையும் மற்றைய 2ம் குற்றவாளிக்கு 70 அயிரம் ரூபா தண்டம் அல்லது 21 மாத சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
குறிப்பி;ட மூவரும் உரிய தண்டப் பணத்தைச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.
கசிப்பு விற்ற குற்றச்சாட்டில் அச்சுவேலியைச் சேர்ந்தவரான மயில் வாகணம் ஞானசேகரன் என்பவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் மாவட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் 15 ஆயிரம் ரூபா தண்டமாக கட்டிவிட்டுச் சென்றார்.
நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய சுமார் மூன்று மணிநேரத்தில் மேலும் இரண்டு நபர்களுடன் இனைந்து 45 போத்தில் கசிப்பை ஆட்டோவில் எடுத்துச்சென்ற போது சுன்னாகம் பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டு மல்லாகம் மாவட்ட நிதிமன்ற நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன் முன்னிலையில் நிறுத்தப்பட்டார். குற்றத்தை மூவரும் ஒப்புக் கொண்டார்கள்.
இதனைத் தொடாந்து 1ம் 3ம் குற்றவாளிகளான அச்சுவேலியைச் சண்முகம் ஸ்ரீதர், அன்னராசா குணேஸ்வரன் ஆகியோருக்கு 40 ஆயிரம் ருபா தண்டம் அல்லது 15 மாதா சிறைத்தண்டனையும் மற்றைய 2ம் குற்றவாளிக்கு 70 அயிரம் ரூபா தண்டம் அல்லது 21 மாத சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
குறிப்பி;ட மூவரும் உரிய தண்டப் பணத்தைச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.
திருட்டு மினசாரம் பெற்றவர்களுக்கு தண்டனை
திருட்டு மின்சாரம் பெற்ற ஒன்பது பேரிடம் இருந்து தண்டப் பணமாக ஒரு லட்சத்தி முப்பத்தையாயிரம் ரூபா அறவிடப்பட்டுள்ளது மல்லாகம் நீதிமன்றம். தண்டம் கட்டத் தவறியவர்களுக்கு ஒருவருக்கு ஆறு மாதகால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இரவு காவல் கடமையில் ஈடுபட்ட பொலிஸார் திருட்டு மின்சாரம் பெற்றவர்களைக் கண்டுபிடித்து மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன் முன்னிலையில் நிறுத்தினர். சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து பத்துப் பேருக்கும் தலா பதினைந்தாயிரம் ரூபா தண்டமாக விதிக்கப்பட்டது. பணத்தை கட்டத் தவறின் ஆறு மாதகால சிறைத் தண்டனையெனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் சுன்னாகத்தை சேர்ந்த கண்ணன் துரைihசா, அகஸ்ரின் யோகநாதன், நாகலிங்கம் பாலகிருஸ்னன், கந்தையா இராசதுரை, கந்தசாமி சுரேஸ்குமார், கிருஸ்ணபிள்ளை சிவகுமார், மாரிமுத்து யோகராசா மற்றும் பெண்களான திருமதிகள் வரதராஜா வரதராணி, சிவஞானம் றெஜினாமணி ஆகியோர் தண்டப் பணத்தை செலுத்தினர். நாமுத்து இரத்தினசிங்கம் குறிப்பிட்ட பணத்தைக் கட்டத் தவறியமையால் ஆறு மாத சிறைத் தண்டனைக்காக சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இரவு காவல் கடமையில் ஈடுபட்ட பொலிஸார் திருட்டு மின்சாரம் பெற்றவர்களைக் கண்டுபிடித்து மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன் முன்னிலையில் நிறுத்தினர். சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து பத்துப் பேருக்கும் தலா பதினைந்தாயிரம் ரூபா தண்டமாக விதிக்கப்பட்டது. பணத்தை கட்டத் தவறின் ஆறு மாதகால சிறைத் தண்டனையெனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் சுன்னாகத்தை சேர்ந்த கண்ணன் துரைihசா, அகஸ்ரின் யோகநாதன், நாகலிங்கம் பாலகிருஸ்னன், கந்தையா இராசதுரை, கந்தசாமி சுரேஸ்குமார், கிருஸ்ணபிள்ளை சிவகுமார், மாரிமுத்து யோகராசா மற்றும் பெண்களான திருமதிகள் வரதராஜா வரதராணி, சிவஞானம் றெஜினாமணி ஆகியோர் தண்டப் பணத்தை செலுத்தினர். நாமுத்து இரத்தினசிங்கம் குறிப்பிட்ட பணத்தைக் கட்டத் தவறியமையால் ஆறு மாத சிறைத் தண்டனைக்காக சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
Wednesday, September 5, 2007
இரத்ததான நிகழ்வு

யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவிவரும் இரத்த தட்டுப்பாட்டின் காரணமாக இரத்தம் வழங்கும் நிகழ்வு மல்லாகத்தில் இடம்பெற்றது.
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 14 வலயத்தினதும் மற்றும் மானிப்பாய் வட்ட லயன்ஸ் கழகம் மல்லாகம் தெல்லிப்பழை லயன்ஸ் கழகம் புனித சதாசகாய மாதா இளைஞர் ஒன்றியம் என்பன இனைந்து இரத்தம் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டன.
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 14 வலயத்தினதும் மற்றும் மானிப்பாய் வட்ட லயன்ஸ் கழகம் மல்லாகம் தெல்லிப்பழை லயன்ஸ் கழகம் புனித சதாசகாய மாதா இளைஞர் ஒன்றியம் என்பன இனைந்து இரத்தம் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டன.
மல்லாகம் புனித சதா சகாய மாதா ஆலுய வளாகத்தில் இடம்பெற்ற இரத்தம் வழங்கும் நிகழ்வில் பலர் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினார்கள். மல்லாகம் பங்குத் தந்தை அருட்திரு கஸ்போர் அடிகளாhர் உரிய ஏற்பாடுகளை செய்திருந்தார்.
ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் வெற்றி
யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக இடம்பெற்ற ஜந்து பேர் பங்கு பற்றும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஏழாலை ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.வுட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் 75வது நிறைவு விழாவையொட்டி இடம் பெற்ற பவள விழா நிகழ்வுக்காக இந்த உதைபந்தாட்டப் போட்டி முதல் தடவையாக நடத்தப்பட்டது
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கைச் சேர்ந்த ஏழாலை மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகமும் மானிப்பாய் றெட்றேஞ்சர் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.
முதல் பாதி ஆட்ட நிறைவில் இரு அணிகளும் தலா ஒவ்
வொரு கோல்களைப் பெற்றன. இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடாந்து இரு அணிகளும் விடாமுயற்சியுடன் விளையாடியதன் மூலம் இரு ஆணிகளும் மாறி மாறி கோல்களைப் பெற்று மேலும் மூன்று கோல்களைப் பெற்று தலா நாலு கோலகள் என்ற நிலையில் ஆட்டம் நிறைவு பெற்றது.வெற்றி தோல்வியை திர்மானிப்பதற்காக மேலும் பத்து நிமிடங்கள் வழங்கப்பட்ட போதிலும் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை. இந் நிலமையில் சம நிலை உடைப்பு உதைகள் மூன்று வழங்கப்பட்டன.
இதில் ஞானமுருகன் விளையாட்டக் கழகம் 03 உதைகளையு
ம் பயன்படுத்தி கோல்களைப் பேற்றுக் கொண்ட போதிலும் றெட் றேஞ்சர் விளையாட்டக்கழக வீரர் ஒரு உதையை வீணாக்கியமையால ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் 07க்கு 05 என்ற கோல்களினால் வெற்றி பெற்று பவள விழாக் கிண்ணத்தை சுவீகரித்தது.யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.
மாட்டு வண்டில் சவாரிப் போட்டி
நீண்ட கால இடைவெளியின் பின்னர் சுன்னாகம் கந்தரோடை சவாரித்திடலில் மாட்டு வண்டி சவாரி இடம்பெற்றுள்ளன. ஆளவவெட்டி மேற்கு கலைமகள் சன சமூக நிலையத்தின் எற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சவாரி மாடுகள் கலந்துகொண்டன. 'சி' பிரிவில் 11 வண்டில்களும் 'பி' பிரிவில் 14 வண்டில்களும் 'எ' பிரிவில் 08 வண்டில்களுமாக மொத்தம் 33 வண்டிகள் கலந்து கொண்டன.
'சி' பிரிவில் 1ம் இடத்தை மல்
லாகத்தைச் சேர்ந்த சிறிலக்சனும் 2ம் இடத்தை புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த ராஜ்கினும் 3ம் இடத்தை மானிப்பாயைச் சேர்ந்த செல்வரத்தினமும் பெற்றுக் கொண்டார்கள்.'பி' பிரிவில் முதலாம் இடத்தை மாதகல் பிரான்பற்றைச் சேர்ந்த ஆனந்தராசாவும் 2ம் இடத்தை அளவெட்டியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளையும் 3ம் இடத்தை திருநெல்வேலியைச் சேர்ந்த சசிகுமாரும் பெற்றுக் கொண்டார்கள்.
'எ' பிரிவில் 1ம் இடத்தை அளவெட்டியைச் சேர்ந்த சிவஞானமும் 2ம் இடத்தை அச்செழுவைச்சேர்ந்த செல்வரத்தினமும் 3ம் இடத்தை வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகாலிங்கமும் பெற்றுக்கொண்டார்கள்.
இப் போட்டிகள் சனசமூக நிலையத் தலைவர் க.உதயகுமார் தலைமையில் இடம் பெற்றன.
Subscribe to:
Posts (Atom)