யாழ்ப்பாணத்தில் படையினரால் ஆரம்பிக்கப்பட்ட விசேட அடையாள அட்டைக்கான பதிவுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக விசேட அடையாள அட்டைக்கான பதிவுகள் திடீரென படைத்தரப்பினரால் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பதிவுகள் மேற்கொள்ளும் பணிகள் கிராம அலுவலர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிய படங்களுடன் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இராணுவத்தினர் தெரிவித்ததன் பெயரில் கிராம அலுவலர்களினால் இந்நடவடிக்கை மேற் கொள்ளப்படுகின்றது.
இதேவேளை சில பகுதிகளில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று பதிவுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். தென்மராட்சி, தீவகம், வடமராட்சிப் பகுதிகளிலும் இந் நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் இடம் பெறலாம் எனத் தெரியவருகின்றது.
உரிய படிவங்கள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டதைத் தொடாந்து இந்நடவடிக்கை இடம்பெறத் தொடங்கியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment