Saturday, September 15, 2007

கள்ளு விற்பனை நிலையத்தில் சாராயம் விற்றதற்கு தண்டம்

(ஹம்சப்பிரியா)

அனுமதிப்பத்திரம் பெறாது கள்ளு விற்பனை நிலையத்தில் அரச சாராயத்தை விற்பனை செய்த தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் மற்றும் சுன்னாகம் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கம் என்பவற்றிற்கு மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் தலா ஜம்பதாயிரம் ரூபா தண்டம் வித்திதது.

தெல்லிப்பளை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த இரண்டு சங்கங்களும் அனுமதிப்பத்திரம் இன்றி சாராயம் விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இரு சங்கங்களின் பிரதிநிதிகளும் குற்றத்தை ஒப்பக் கொண்டனர். வலிகாமம் பகுதியில் கடந்த சில வாரங்களாகப் பொலிஸார் சட்டவிரோத மது விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கையெடுத்து வருகின்றனர்.

No comments: