Monday, September 10, 2007

குடிசன கணக்கெடுப்பு நிறுத்தம்

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிசன கணக்கெடுப்பு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணியில் ஈடுபடுவதற்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் உரிய காகிதாதிகள் என்பன வழங்கப்பட்ட நிலையில் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இந்தப் பணி நிறுத்தப்பட்டமைக்கான சரியான காரணம் எதுவும் யாருக்கும் தெரிய வரவில்லை. ஆனாலும் பணியில் ஈடுபட்டவர்களிடம் இருந்த உரிய காகதாதிகளை மீளக் கையளிக்கும்படி பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாக இப்பயிற்சி வகுப்புக்கச் சென்று கடமையை ஆரம்பித்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

No comments: