Wednesday, September 5, 2007

இரத்ததான நிகழ்வு


யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவிவரும் இரத்த தட்டுப்பாட்டின் காரணமாக இரத்தம் வழங்கும் நிகழ்வு மல்லாகத்தில் இடம்பெற்றது.
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 14 வலயத்தினதும் மற்றும் மானிப்பாய் வட்ட லயன்ஸ் கழகம் மல்லாகம் தெல்லிப்பழை லயன்ஸ் கழகம் புனித சதாசகாய மாதா இளைஞர் ஒன்றியம் என்பன இனைந்து இரத்தம் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டன.


மல்லாகம் புனித சதா சகாய மாதா ஆலுய வளாகத்தில் இடம்பெற்ற இரத்தம் வழங்கும் நிகழ்வில் பலர் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினார்கள். மல்லாகம் பங்குத் தந்தை அருட்திரு கஸ்போர் அடிகளாhர் உரிய ஏற்பாடுகளை செய்திருந்தார்.

No comments: