மனித உரிமைகளுக்கான தூதுவருக்கு
யாழில் கண்ணீர்க் கதறல் வரவேற்பு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான தூதர் லூயிஸ் ஆர்பர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மற்றும் கதறலுடன் கூடிய வரவேற்பை அளித்தனர்.
லூயிஸ் ஆர்பர் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐநா தூதரகத்திற்கு முதலில் வருகை தந்தார். யாழ் குடாநாட்டில் காணாமல்போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் ஆகியோரின் உறவினர்கள் கதறி அழுத வண்ணம் அவரை வரவேற்றார்கள்.
காலையில் அந்த இடத்திற்கு வந்து கூடிய மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவதற்கு இராணுவத்தினர் தம்மாலியன்ற முழுப் பணிகளையும் மேற்கொண்டனர். ஐநா தூதரிடம் பொதுமக்கள் தமது குறைகளைக் கூறமுயன்ற போதிலும் படையினரின் பலத்த தடைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. படையினரின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து போகாமல் திடமுடன் நின்ற மக்கள் தூதுவரைச் சந்தித்து தமது வேதனைகளை அவருக்கு எடுத்துக் கூறினர்.
இதேவேளை யாழ்ப்பாணம் பேராயர் இல்லத்தில் நடைபெறவிருந்த சந்திப்பில் யாழ் மக்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் மதத்தலைவர்கள் தவிர்ந்த யாரும் குறிப்பிட்ட இடத்திற்கு அண்மையில் செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
யாழ்ப்பாணத்தில் சோதனைகள் அதிகரிப்பு
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இன்று இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள் மிகவும் அதிகமாகக் காணப்பட்டன. வழமைக்கு மாறாக, முலைவைச் சந்தி உதயன் சந்தி கொன்மன்ற் சந்தி கொட்டடிச் சந்தி இலுப்பையடிச் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் பேராயர் இல்லத்தை சூழவுள்ள பிரதான வீதிகள் உட்பட நகரிலுள்ள அனைத்துச் சிறு வீதிகளிலும் திடீர் சோதனைத் தடைகள் அமைத்து பொதுமக்கள் சோதனையிடப்பட்டனர்.
மோட்டார் சைக்கிள் அணியினர் உட்பட நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் நின்று இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டார்கள் இதனால் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பொது மகக்ளின் நடமாட்டம் மிகவும் குறைவாகக் காணப்பட்டது.
பேராயர் இல்லப் பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் யாரையும் அனமதிக்கவில்லை. இதேவேளை செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்களும் அங்கு நின்ற படையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.
ஐநா மனித உரிமைகளுக்கான தூதர் வருகையைஒட்டி யாரும் அவரைச் சந்திக்கவிடாமல் தடுக்கும் முகமாக இத்தகைய நடவடிக்கையை படைத்தரப்பினர் மேற்கொண்டனர்.
இராணுவ மோட்டார் சைக்கிள் மோதி
அப்பாவி இளைஞர் படுகாயம்
சுன்னாகத்தில் நேற்று மாலை இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பின்புறமாக மோதியதில் இளைஞர் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
ஏழாலை தம்புவத்தையைச் சேர்ந்த அரியநாயகம் சயீதரன் (28) என்ற இளைஞரே காயமடைந்தவராவார்.
சுன்னாகம் பிரதேச சபையின் ஏழாலை உப பணியகத்தில் கடமையாற்றுகின்ற இவர், மோட்டார் சைக்கிளில் தனது அலுவலகத்தில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு வந்தபோது விபத்து நிகழ்ந்தது. வேகமாக வந்த அதிரடிப் படையினரின் மோட்டார் சைக்கிள் பின்புறமாக மோதி அவரது மோட்டார் சைக்கிளைத் தூக்கி எறிந்தது.
படுகாயமடைந்த சயீதரன் உடனடியாக அங்கிருந்தவர்களினால் தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டார். விபத்துக்குக் காரணமான அதிரடிப்படையினர் அங்கிருந்து ஓடித் தப்பி விட்டனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
Friday, October 12, 2007
Monday, October 1, 2007
வேலணையில் ஒருவர் பலி
இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வேலணையில் ஓருவர் பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.
வேலணை மேற்கைச் சேர்ந்த நடராசா ரவீந்திரன் (40) என்பவரே பலியான குடும்பஸ்தர் ஆவார். இவருடைய கொலைக்கான காரணம் குறித்த விசாரணையை ஊர்காவற்துறைப் காவற்றுறையினர் மேற்கொண்டுள்ளார்கள்.
ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கும்படி பணிக்கப்பட்டுள்ளது.
சரணடையும் சம்பவங்கள் தொடர்கின்றன
யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்றும் மூவர் சரணடைந்துள்ளனர். இனம் தெரியாதவர்கள் விடுத்த உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே இவர்கள் சரணடைந்துள்ளார்கள் என்று ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மராட்சி, வலிகாம் பகுதிகளைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்களே இப்படிச் சரணடைந்துள்ளார்கள். அவர்கள் மனித உரிமைகள் அலுவலக ஊழியர்களினால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்களைப் பாதுகாப்புக்காக காவலில் வைப்பதற்கு யாழ். காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள்.
கடந்த சில வாரங்களாக தென்மராட்சிப் பகுதியில் இருந்து யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைபவர்களின் எண்ணிககை அதிகரித்துக் கொண்டுசெல்கின்றது.
சடலங்கள் அடையாளம் காட்டப்பட்டன
கடந்த வெள்ளி, சனி ஆகிய நாட்களில் கிராம அலுவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்ட சடலங்கள் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பருத்தித்துறை பொலிகண்டிப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டார் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்ட சடலம் தும்பளையைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான விஜயரெட்னம் விஜயகாந் என்பவருடையது என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். சடலத்தை அவர்கள் பொறுப்பேற்று எடுத்துச் சென்றுள்ளனர்.
இதேபோன்று சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்டதாகக் கூறி ஒப்படைக்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான லொறிச் சாரதி பத்மநாதன் பத்மலோகன் (30) என்பவருடையது என உறவினர்கள் அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாதவர்களினால் யாழ். பஸ் நிலையப் பகுதியில் வைத்து கடந்த வியாழக்கிழமை இவர் கடத்திச் செல்லப்பட்டார் என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். காவல் நிலையத்திலும் இது தொடர்பாக அவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வேலணையில் ஓருவர் பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.
வேலணை மேற்கைச் சேர்ந்த நடராசா ரவீந்திரன் (40) என்பவரே பலியான குடும்பஸ்தர் ஆவார். இவருடைய கொலைக்கான காரணம் குறித்த விசாரணையை ஊர்காவற்துறைப் காவற்றுறையினர் மேற்கொண்டுள்ளார்கள்.
ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கும்படி பணிக்கப்பட்டுள்ளது.
சரணடையும் சம்பவங்கள் தொடர்கின்றன
யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்றும் மூவர் சரணடைந்துள்ளனர். இனம் தெரியாதவர்கள் விடுத்த உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே இவர்கள் சரணடைந்துள்ளார்கள் என்று ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தென்மராட்சி, வலிகாம் பகுதிகளைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்களே இப்படிச் சரணடைந்துள்ளார்கள். அவர்கள் மனித உரிமைகள் அலுவலக ஊழியர்களினால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்களைப் பாதுகாப்புக்காக காவலில் வைப்பதற்கு யாழ். காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள்.
கடந்த சில வாரங்களாக தென்மராட்சிப் பகுதியில் இருந்து யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைபவர்களின் எண்ணிககை அதிகரித்துக் கொண்டுசெல்கின்றது.
சடலங்கள் அடையாளம் காட்டப்பட்டன
கடந்த வெள்ளி, சனி ஆகிய நாட்களில் கிராம அலுவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்ட சடலங்கள் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பருத்தித்துறை பொலிகண்டிப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டார் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்ட சடலம் தும்பளையைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான விஜயரெட்னம் விஜயகாந் என்பவருடையது என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். சடலத்தை அவர்கள் பொறுப்பேற்று எடுத்துச் சென்றுள்ளனர்.
இதேபோன்று சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்டதாகக் கூறி ஒப்படைக்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான லொறிச் சாரதி பத்மநாதன் பத்மலோகன் (30) என்பவருடையது என உறவினர்கள் அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாதவர்களினால் யாழ். பஸ் நிலையப் பகுதியில் வைத்து கடந்த வியாழக்கிழமை இவர் கடத்திச் செல்லப்பட்டார் என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். காவல் நிலையத்திலும் இது தொடர்பாக அவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
அதிகாலை இருவர் சுட்டுக் கொலை
கடந்த சனிக்கிழமை அதிகாலை வெள்ளை வானில் கொண்டுவரப்பட்டு; இறக்கிஇரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒருவரின் சடலம் மருதனார் மடம் உரும்பிராய் வீதியில் உள்ள இணுவில் புகையிரத நிலையத்திற்கு அணமையாக் காணப்பட்டது. மற்றைய சடலம் சுன்னாகம் மாசியப்பிட்டி வீதியில் உள்ள குளத்திற்கு அண்மையாக வயல் வெளியில் உள்ள வீதியில் காணப்பட்டது.
மருதனார்மடம் விதியில் காணப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னால் வைத்து நேற்றுமுன்தினம் கடத்தப்பட்ட இணுவில் மேற்கைச்சேர்ந்த பாலசுப்பிரமணியம் சனாதரன் (25) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கந்தரோடை வீதியில் காணப்பட்ட சடலம் இனம் காணப்படவில்லை குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன், சடலங்களைப் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவற்றை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன் பின்னர் உறவினர்களிடம் சடலங்களை ஒப்படைக்கும் படி காவல்துறையினருக்குக் கட்டளையிட்டுள்ளார்.
தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் கடத்தப்பட்டார்
சுன்னாம் பகுதியில் கடந்த வெள்ளியன்று இரவு வீட்டில் இருந்த இளைஞர் ஓருவர் இனம்தெரியாத ஆயததாரிகளினால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார்.
இரவு 9.00 மணியளவில் இவரது வீட்டிற்கு வந்த ஆயததாரிகள் வீட்டாரை துப்பாக்கி முனையில்; நிறுத்திவிட்டு ஆனந்தரெத்தினம் கஜன் (22) என்பவரைக் கடத்திச் சென்றுள்ளார்கள். சுன்னாகம் ஈ.பிடி.பி முகாமுக்கு முன்னாள் உள்ள ஒழுங்கையில் வசிப்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.
பெற்றோர்கள் இது தொடர்பாக யாழ். மனித உரிமைகள் ஆனைக்குழுவிலும் முறையிட்டுள்ளார்கள்.
வீடு புகுந்து இளைஞன் கடத்தல்
கடந்த வெள்ளியன்று இரவு 9.30 மணியளவில் வாகனத்தில் வந்து வீட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்த ஆயததாரிகள் சிலர் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதுடன் விட்டில் உள்ளவர்களையும் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.
அளவெட்டி வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இரவு நேரம் வீட்டிற்கு வந்தவர்கள் இளைஞரின் பெயரைக்கூறி அழைத்தனர் எனவும் -
வீட்டார் கதவைத் திறந்து கொண்டு சென்றபோது குறிப்பி;ட இளைஞரை கடத்த முற்பட்டனர் எனவும் -
இதனை தடுக்க முயன்ற வேளையில் ஆயுததாரிகளுக்கும் இளைஞனின் பெற்றோர்களுக்கும் இடையே பெரும் இழுபறி ஏற்பட்டது எனவும் -
அதைத் தொடர்ந்து தாயும் தகப்பனும் தலையில் தாக்கப்பட்டுள்ளார்கள் எனவும் -
கடத்தப்பட்ட இளைஞனின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இளைஞன் கடத்தப்படுவதைத் தடுக்க அவனது பெற்றோர்கள் போராடியதைத் தொடர்ந்து ஆயுததரிகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்கள்.
இச்சம்பவத்தின் பின்னர் கடத்தப்பட்ட இளைஞனின் தாய் மயக்கமுற்ற நிலையிலும் காயங்களுடன் தகப்பனும் தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் கொண்டுசெல்லப்பட்டனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
காயங்களுக்க உள்ளாகியவர்கள் திரு திருமதி இராசதுரை. இவர்களின் 23 வயதான மகன் பிரபாகரே ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை வெள்ளை வானில் கொண்டுவரப்பட்டு; இறக்கிஇரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒருவரின் சடலம் மருதனார் மடம் உரும்பிராய் வீதியில் உள்ள இணுவில் புகையிரத நிலையத்திற்கு அணமையாக் காணப்பட்டது. மற்றைய சடலம் சுன்னாகம் மாசியப்பிட்டி வீதியில் உள்ள குளத்திற்கு அண்மையாக வயல் வெளியில் உள்ள வீதியில் காணப்பட்டது.
மருதனார்மடம் விதியில் காணப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னால் வைத்து நேற்றுமுன்தினம் கடத்தப்பட்ட இணுவில் மேற்கைச்சேர்ந்த பாலசுப்பிரமணியம் சனாதரன் (25) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கந்தரோடை வீதியில் காணப்பட்ட சடலம் இனம் காணப்படவில்லை குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன், சடலங்களைப் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவற்றை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன் பின்னர் உறவினர்களிடம் சடலங்களை ஒப்படைக்கும் படி காவல்துறையினருக்குக் கட்டளையிட்டுள்ளார்.
தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் கடத்தப்பட்டார்
சுன்னாம் பகுதியில் கடந்த வெள்ளியன்று இரவு வீட்டில் இருந்த இளைஞர் ஓருவர் இனம்தெரியாத ஆயததாரிகளினால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார்.
இரவு 9.00 மணியளவில் இவரது வீட்டிற்கு வந்த ஆயததாரிகள் வீட்டாரை துப்பாக்கி முனையில்; நிறுத்திவிட்டு ஆனந்தரெத்தினம் கஜன் (22) என்பவரைக் கடத்திச் சென்றுள்ளார்கள். சுன்னாகம் ஈ.பிடி.பி முகாமுக்கு முன்னாள் உள்ள ஒழுங்கையில் வசிப்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.
பெற்றோர்கள் இது தொடர்பாக யாழ். மனித உரிமைகள் ஆனைக்குழுவிலும் முறையிட்டுள்ளார்கள்.
வீடு புகுந்து இளைஞன் கடத்தல்
கடந்த வெள்ளியன்று இரவு 9.30 மணியளவில் வாகனத்தில் வந்து வீட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்த ஆயததாரிகள் சிலர் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதுடன் விட்டில் உள்ளவர்களையும் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.
அளவெட்டி வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இரவு நேரம் வீட்டிற்கு வந்தவர்கள் இளைஞரின் பெயரைக்கூறி அழைத்தனர் எனவும் -
வீட்டார் கதவைத் திறந்து கொண்டு சென்றபோது குறிப்பி;ட இளைஞரை கடத்த முற்பட்டனர் எனவும் -
இதனை தடுக்க முயன்ற வேளையில் ஆயுததாரிகளுக்கும் இளைஞனின் பெற்றோர்களுக்கும் இடையே பெரும் இழுபறி ஏற்பட்டது எனவும் -
அதைத் தொடர்ந்து தாயும் தகப்பனும் தலையில் தாக்கப்பட்டுள்ளார்கள் எனவும் -
கடத்தப்பட்ட இளைஞனின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இளைஞன் கடத்தப்படுவதைத் தடுக்க அவனது பெற்றோர்கள் போராடியதைத் தொடர்ந்து ஆயுததரிகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்கள்.
இச்சம்பவத்தின் பின்னர் கடத்தப்பட்ட இளைஞனின் தாய் மயக்கமுற்ற நிலையிலும் காயங்களுடன் தகப்பனும் தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் கொண்டுசெல்லப்பட்டனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
காயங்களுக்க உள்ளாகியவர்கள் திரு திருமதி இராசதுரை. இவர்களின் 23 வயதான மகன் பிரபாகரே ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)