அதிகாலை இருவர் சுட்டுக் கொலை
கடந்த சனிக்கிழமை அதிகாலை வெள்ளை வானில் கொண்டுவரப்பட்டு; இறக்கிஇரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒருவரின் சடலம் மருதனார் மடம் உரும்பிராய் வீதியில் உள்ள இணுவில் புகையிரத நிலையத்திற்கு அணமையாக் காணப்பட்டது. மற்றைய சடலம் சுன்னாகம் மாசியப்பிட்டி வீதியில் உள்ள குளத்திற்கு அண்மையாக வயல் வெளியில் உள்ள வீதியில் காணப்பட்டது.
மருதனார்மடம் விதியில் காணப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னால் வைத்து நேற்றுமுன்தினம் கடத்தப்பட்ட இணுவில் மேற்கைச்சேர்ந்த பாலசுப்பிரமணியம் சனாதரன் (25) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
கந்தரோடை வீதியில் காணப்பட்ட சடலம் இனம் காணப்படவில்லை குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன், சடலங்களைப் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவற்றை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன் பின்னர் உறவினர்களிடம் சடலங்களை ஒப்படைக்கும் படி காவல்துறையினருக்குக் கட்டளையிட்டுள்ளார்.
தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் கடத்தப்பட்டார்
சுன்னாம் பகுதியில் கடந்த வெள்ளியன்று இரவு வீட்டில் இருந்த இளைஞர் ஓருவர் இனம்தெரியாத ஆயததாரிகளினால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார்.
இரவு 9.00 மணியளவில் இவரது வீட்டிற்கு வந்த ஆயததாரிகள் வீட்டாரை துப்பாக்கி முனையில்; நிறுத்திவிட்டு ஆனந்தரெத்தினம் கஜன் (22) என்பவரைக் கடத்திச் சென்றுள்ளார்கள். சுன்னாகம் ஈ.பிடி.பி முகாமுக்கு முன்னாள் உள்ள ஒழுங்கையில் வசிப்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.
பெற்றோர்கள் இது தொடர்பாக யாழ். மனித உரிமைகள் ஆனைக்குழுவிலும் முறையிட்டுள்ளார்கள்.
வீடு புகுந்து இளைஞன் கடத்தல்
கடந்த வெள்ளியன்று இரவு 9.30 மணியளவில் வாகனத்தில் வந்து வீட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்த ஆயததாரிகள் சிலர் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதுடன் விட்டில் உள்ளவர்களையும் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.
அளவெட்டி வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இரவு நேரம் வீட்டிற்கு வந்தவர்கள் இளைஞரின் பெயரைக்கூறி அழைத்தனர் எனவும் -
வீட்டார் கதவைத் திறந்து கொண்டு சென்றபோது குறிப்பி;ட இளைஞரை கடத்த முற்பட்டனர் எனவும் -
இதனை தடுக்க முயன்ற வேளையில் ஆயுததாரிகளுக்கும் இளைஞனின் பெற்றோர்களுக்கும் இடையே பெரும் இழுபறி ஏற்பட்டது எனவும் -
அதைத் தொடர்ந்து தாயும் தகப்பனும் தலையில் தாக்கப்பட்டுள்ளார்கள் எனவும் -
கடத்தப்பட்ட இளைஞனின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இளைஞன் கடத்தப்படுவதைத் தடுக்க அவனது பெற்றோர்கள் போராடியதைத் தொடர்ந்து ஆயுததரிகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்கள்.
இச்சம்பவத்தின் பின்னர் கடத்தப்பட்ட இளைஞனின் தாய் மயக்கமுற்ற நிலையிலும் காயங்களுடன் தகப்பனும் தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் கொண்டுசெல்லப்பட்டனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
காயங்களுக்க உள்ளாகியவர்கள் திரு திருமதி இராசதுரை. இவர்களின் 23 வயதான மகன் பிரபாகரே ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment