Tuesday, November 13, 2007

இணுவில் இந்துக் கல்லூரிக்கு தீவைப்பு

இணுவில் இந்துக் கல்லூரிக்கு நேற்று நள்ளிரவு இனம் தெரியாதவர்கள் தீவைத்துக் கொழுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் இந்த விசமிகளின் நடவடிக்கையினால் பாடசாலை அதிபரின் அலுவலகக் கதவுகள் தீயில் எரிந்துள்ளதுடன் தேநீர் சாலையிலும் தீயிடப்பட்டுள்ளது.

ஆனாபோதிலும் இவைகள் முழுமையாக எரியாமையால் பாடசாலை தீயில் இருந்து தப்பியுள்ளது. இதேவேளை பாடசாலையின் அலுமாரிகள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளதோடு வாழைத் தோட்டம் வெட்டிச் சரிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸில் அதிபர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார் தமது விசாரனையைத் தொடர்ந்து ஒருவரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்தள்ளனர். மேலும் சிலரைத் தேடுவதாதகவும் தெரியவருகின்றது.

குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த இளைஞர் சிலர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கலாம் எனப் பலரும் தெரிவிக்கின்றார்கள்.

Friday, October 12, 2007

மனித உரிமைகளுக்கான தூதுவருக்கு
யாழில் கண்ணீர்க் கதறல் வரவேற்பு


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான தூதர் லூயிஸ் ஆர்பர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மற்றும் கதறலுடன் கூடிய வரவேற்பை அளித்தனர்.

லூயிஸ் ஆர்பர் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐநா தூதரகத்திற்கு முதலில் வருகை தந்தார். யாழ் குடாநாட்டில் காணாமல்போனவர்கள், கடத்தப்பட்டவர்கள், சரணடைந்தவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்கள் ஆகியோரின் உறவினர்கள் கதறி அழுத வண்ணம் அவரை வரவேற்றார்கள்.

காலையில் அந்த இடத்திற்கு வந்து கூடிய மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விடுவதற்கு இராணுவத்தினர் தம்மாலியன்ற முழுப் பணிகளையும் மேற்கொண்டனர். ஐநா தூதரிடம் பொதுமக்கள் தமது குறைகளைக் கூறமுயன்ற போதிலும் படையினரின் பலத்த தடைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. படையினரின் அச்சுறுத்தல்களுக்குப் பயந்து போகாமல் திடமுடன் நின்ற மக்கள் தூதுவரைச் சந்தித்து தமது வேதனைகளை அவருக்கு எடுத்துக் கூறினர்.

இதேவேளை யாழ்ப்பாணம் பேராயர் இல்லத்தில் நடைபெறவிருந்த சந்திப்பில் யாழ் மக்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் மதத்தலைவர்கள் தவிர்ந்த யாரும் குறிப்பிட்ட இடத்திற்கு அண்மையில் செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்ப்பாணத்தில் சோதனைகள் அதிகரிப்பு


யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இன்று இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள் மிகவும் அதிகமாகக் காணப்பட்டன. வழமைக்கு மாறாக, முலைவைச் சந்தி உதயன் சந்தி கொன்மன்ற் சந்தி கொட்டடிச் சந்தி இலுப்பையடிச் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் பேராயர் இல்லத்தை சூழவுள்ள பிரதான வீதிகள் உட்பட நகரிலுள்ள அனைத்துச் சிறு வீதிகளிலும் திடீர் சோதனைத் தடைகள் அமைத்து பொதுமக்கள் சோதனையிடப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள் அணியினர் உட்பட நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் நின்று இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டார்கள் இதனால் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பொது மகக்ளின் நடமாட்டம் மிகவும் குறைவாகக் காணப்பட்டது.

பேராயர் இல்லப் பகுதிக்கு பொதுமக்கள் செல்வதற்கு இராணுவத்தினர் யாரையும் அனமதிக்கவில்லை. இதேவேளை செய்தி சேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர்களும் அங்கு நின்ற படையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.

ஐநா மனித உரிமைகளுக்கான தூதர் வருகையைஒட்டி யாரும் அவரைச் சந்திக்கவிடாமல் தடுக்கும் முகமாக இத்தகைய நடவடிக்கையை படைத்தரப்பினர் மேற்கொண்டனர்.

இராணுவ மோட்டார் சைக்கிள் மோதி
அப்பாவி இளைஞர் படுகாயம்

சுன்னாகத்தில் நேற்று மாலை இராணுவத்தினரின் மோட்டார் சைக்கிள் பின்புறமாக மோதியதில் இளைஞர் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
ஏழாலை தம்புவத்தையைச் சேர்ந்த அரியநாயகம் சயீதரன் (28) என்ற இளைஞரே காயமடைந்தவராவார்.

சுன்னாகம் பிரதேச சபையின் ஏழாலை உப பணியகத்தில் கடமையாற்றுகின்ற இவர், மோட்டார் சைக்கிளில் தனது அலுவலகத்தில் இருந்து தலைமை அலுவலகத்திற்கு வந்தபோது விபத்து நிகழ்ந்தது. வேகமாக வந்த அதிரடிப் படையினரின் மோட்டார் சைக்கிள் பின்புறமாக மோதி அவரது மோட்டார் சைக்கிளைத் தூக்கி எறிந்தது.

படுகாயமடைந்த சயீதரன் உடனடியாக அங்கிருந்தவர்களினால் தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டார். விபத்துக்குக் காரணமான அதிரடிப்படையினர் அங்கிருந்து ஓடித் தப்பி விட்டனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

Monday, October 1, 2007

வேலணையில் ஒருவர் பலி

இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வேலணையில் ஓருவர் பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.

வேலணை மேற்கைச் சேர்ந்த நடராசா ரவீந்திரன் (40) என்பவரே பலியான குடும்பஸ்தர் ஆவார். இவருடைய கொலைக்கான காரணம் குறித்த விசாரணையை ஊர்காவற்துறைப் காவற்றுறையினர் மேற்கொண்டுள்ளார்கள்.

ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கும்படி பணிக்கப்பட்டுள்ளது.


சரணடையும் சம்பவங்கள் தொடர்கின்றன

யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இன்றும் மூவர் சரணடைந்துள்ளனர். இனம் தெரியாதவர்கள் விடுத்த உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே இவர்கள் சரணடைந்துள்ளார்கள் என்று ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென்மராட்சி, வலிகாம் பகுதிகளைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர்களே இப்படிச் சரணடைந்துள்ளார்கள். அவர்கள் மனித உரிமைகள் அலுவலக ஊழியர்களினால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்களைப் பாதுகாப்புக்காக காவலில் வைப்பதற்கு யாழ். காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள்.

கடந்த சில வாரங்களாக தென்மராட்சிப் பகுதியில் இருந்து யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைபவர்களின் எண்ணிககை அதிகரித்துக் கொண்டுசெல்கின்றது.


சடலங்கள் அடையாளம் காட்டப்பட்டன

கடந்த வெள்ளி, சனி ஆகிய நாட்களில் கிராம அலுவர்களின் உதவியுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்ட சடலங்கள் உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பருத்தித்துறை பொலிகண்டிப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டார் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்ட சடலம் தும்பளையைச் சேர்ந்த ஆட்டோ சாரதியான விஜயரெட்னம் விஜயகாந் என்பவருடையது என அவரது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். சடலத்தை அவர்கள் பொறுப்பேற்று எடுத்துச் சென்றுள்ளனர்.

இதேபோன்று சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் காணப்பட்டதாகக் கூறி ஒப்படைக்கப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரான லொறிச் சாரதி பத்மநாதன் பத்மலோகன் (30) என்பவருடையது என உறவினர்கள் அடையாளம் காட்டியதைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாதவர்களினால் யாழ். பஸ் நிலையப் பகுதியில் வைத்து கடந்த வியாழக்கிழமை இவர் கடத்திச் செல்லப்பட்டார் என உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். காவல் நிலையத்திலும் இது தொடர்பாக அவர்கள் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
அதிகாலை இருவர் சுட்டுக் கொலை

கடந்த சனிக்கிழமை அதிகாலை வெள்ளை வானில் கொண்டுவரப்பட்டு; இறக்கிஇரு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒருவரின் சடலம் மருதனார் மடம் உரும்பிராய் வீதியில் உள்ள இணுவில் புகையிரத நிலையத்திற்கு அணமையாக் காணப்பட்டது. மற்றைய சடலம் சுன்னாகம் மாசியப்பிட்டி வீதியில் உள்ள குளத்திற்கு அண்மையாக வயல் வெளியில் உள்ள வீதியில் காணப்பட்டது.

மருதனார்மடம் விதியில் காணப்பட்ட சடலம் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னால் வைத்து நேற்றுமுன்தினம் கடத்தப்பட்ட இணுவில் மேற்கைச்சேர்ந்த பாலசுப்பிரமணியம் சனாதரன் (25) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கந்தரோடை வீதியில் காணப்பட்ட சடலம் இனம் காணப்படவில்லை குறிப்பிட்ட இடத்திற்குச் சென்ற மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன், சடலங்களைப் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவற்றை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன் பின்னர் உறவினர்களிடம் சடலங்களை ஒப்படைக்கும் படி காவல்துறையினருக்குக் கட்டளையிட்டுள்ளார்.


தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் கடத்தப்பட்டார்

சுன்னாம் பகுதியில் கடந்த வெள்ளியன்று இரவு வீட்டில் இருந்த இளைஞர் ஓருவர் இனம்தெரியாத ஆயததாரிகளினால் துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டார்.

இரவு 9.00 மணியளவில் இவரது வீட்டிற்கு வந்த ஆயததாரிகள் வீட்டாரை துப்பாக்கி முனையில்; நிறுத்திவிட்டு ஆனந்தரெத்தினம் கஜன் (22) என்பவரைக் கடத்திச் சென்றுள்ளார்கள். சுன்னாகம் ஈ.பிடி.பி முகாமுக்கு முன்னாள் உள்ள ஒழுங்கையில் வசிப்பவரே இவ்வாறு கடத்தப்பட்டவராவார்.
பெற்றோர்கள் இது தொடர்பாக யாழ். மனித உரிமைகள் ஆனைக்குழுவிலும் முறையிட்டுள்ளார்கள்.


வீடு புகுந்து இளைஞன் கடத்தல்

கடந்த வெள்ளியன்று இரவு 9.30 மணியளவில் வாகனத்தில் வந்து வீட்டிற்குள் அத்துமீறிப் பிரவேசித்த ஆயததாரிகள் சிலர் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதுடன் விட்டில் உள்ளவர்களையும் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.

அளவெட்டி வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இரவு நேரம் வீட்டிற்கு வந்தவர்கள் இளைஞரின் பெயரைக்கூறி அழைத்தனர் எனவும் -
வீட்டார் கதவைத் திறந்து கொண்டு சென்றபோது குறிப்பி;ட இளைஞரை கடத்த முற்பட்டனர் எனவும் -

இதனை தடுக்க முயன்ற வேளையில் ஆயுததாரிகளுக்கும் இளைஞனின் பெற்றோர்களுக்கும் இடையே பெரும் இழுபறி ஏற்பட்டது எனவும் -

அதைத் தொடர்ந்து தாயும் தகப்பனும் தலையில் தாக்கப்பட்டுள்ளார்கள் எனவும் -

கடத்தப்பட்ட இளைஞனின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இளைஞன் கடத்தப்படுவதைத் தடுக்க அவனது பெற்றோர்கள் போராடியதைத் தொடர்ந்து ஆயுததரிகள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்கள்.

இச்சம்பவத்தின் பின்னர் கடத்தப்பட்ட இளைஞனின் தாய் மயக்கமுற்ற நிலையிலும் காயங்களுடன் தகப்பனும் தெல்லிப்பழை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் கொண்டுசெல்லப்பட்டனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
காயங்களுக்க உள்ளாகியவர்கள் திரு திருமதி இராசதுரை. இவர்களின் 23 வயதான மகன் பிரபாகரே ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

Friday, September 28, 2007

இணுவிலில் கிளைமோர்: இளைஞன் காயம்

இணுவிலில் இன்று காலை கிளைமோர் வெடித்ததில் இளைஞர் ஒருவரின் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டன என்று யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. காலை 9. 00 மணியளவில் இந்தச் சம்பவம் காரைக்கால் சிவன்கோவிலுக்கு அண்மையாக இடம்பெற்றுள்ளது.

காலையில் வீதியால் வந்த இளைஞரே கிளைமோருக்கு இலக்காகியுள்ளார். காயமடைந்த இளைஞர் வீதியில் மயக்கமுற்ற நிலையில் இரத்தப் வெள்ளத்தில் கிடந்தார் எனவும் -

கிளைமோர் வெடித்த சத்தத்தைக்கேட்டு குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்த படையினர் அந்த இளைஞரைக் கொண்டு சென்றனர் என்றும் - அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோரை எடுக்க முற்பட்ட வேளையே அது வெடித்தது என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். பக்கச்சார்பற்ற தகவல்கள் இதனை ஊர்ஜிதப்படுத்தவில்லை.


அராலி இந்துக் கல்லூரி சம்பியன்

சங்கானை கல்விக்கோட்டப் பாடசாலை அணிகளுக்கு இடையே இடம்பெற்ற 16 வயதுப் பிரிவினருக்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் அராலி இந்துக் கல்லூரி சம்பியனாகியுள்ளது.

சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி மைதானத்தில் சங்கானை கல்விக்கோட்ட பணிப்பாளர் துரை எங்கரசு தலைமையில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியும் அராலி இந்துக் கல்லூரியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் அராலி இந்துக் கல்லூரி ஒரு கோலைப் பெற்று முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெறாத நிலையில் அராலி இந்துக் கல்லூரி 16 வயதுப் பிரிவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியை 01 க்கு 00 என்ற கோல்கணக்கில் வெற்றி கொண்டு சங்கானைக்கோட்ட சம்பியனாகியது.

முறைகேடான ஆட்டம்

18 வயதுப் பிரிவினருக்கான இறுதிப் போட்டியில் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியும் அராலி இந்துக் கல்லூரியும் மோதிக் கொண்டன. இதில் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில் ஆட்டம் நிறைவுபெற்றது.

முதல் பாதி ஆட்டத்தில் அராலி இந்துக் கல்லூரி வீரர்கள் இருவர் தமது மேலங்கியை கழற்றி மைதானத்தில் சுழற்றியமைக்காக மத்தியஸ்தரினால் மஞ்சல் அட்டை காட்டி எச்சரிக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் அராலி இந்துக் கல்லூரி வீரர்கள் இருவர் ஒரே சமயத்தில் தண்டனை எல்லைப் பகுதிக்குள் முறைகேடாக விளையாடினர். எதிரணி வீரரை அவர்களில் ஒருவர் காலால் உதைக்க மற்றவர் பந்தை கையால் தட்டினார்.

இதனை அவதானித்த மத்தியஸ்தர் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி அணிக்கு தண்டனை உதைக்குரிய வாய்ப்பை அளித்தார். அதனை ஏற்க்க மறுத்த அராலி இந்துக் கல்லூரி அணியினர் தொடர்ந்து விளையாடவும் எதிர்ப்புத் தெரிவித்து மைதானத்தில் இருந்தனர். இதனை அடுத்து ஆட்டம் முடிவடைந்ததாக அறிவித்த நடுவர் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதனால் 18 வயதுப் பிரிவினருக்கான கேடயத்தை வட்டுக்கோட்டை மத்திய கல்லூரிக்கு பிரதம விருந்தினர் ஓய்வுபெற்ற தென்மராட்சி உடற்கல்விப் உதவிக் கல்விப் பணிப்பாளர் மு.லோகநாதன் வழங்கி கௌரவித்தார்.


சித்தன்கோணியில் தொடர் பதற்றம்

சித்தன்கேணிச் சந்தியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலைத் அடுத்து அந்தப் பகுதியில் தொடர்ந்தும் பதற்றமான நிலைமை இன்றுடன் மூன்றாவது நாளாகவும் காணப்படுகின்றது.

அந்தப் பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் வீதியால் செல்லும் வாகணங்களை மறிப்பதும் இளைஞர்களைத் தாக்குவதுமாக அராஜகம் செய்தபடி இருக்கின்றனர் குறிப்பாக வர்த்தக நிலையங்கள் முழுமையாகத் திறந்து இயங்காத நிலைமையே இன்றும் காணப்படுகின்றது. அத்துடன் வீதியால் செல்லும் பொதுமக்கள், அரச ஊழியர்கள் என்ற வேறுபாடுகள் இன்றி அனைவரையும் வீதியில் உள்ள புற்கள் பற்றைகளைத் துப்புரவு செய்யும்படியும் மரங்களை வெட்டும்படியும் வற்புறுத்தி வேலை வாங்கி வருகின்றனர் இராணுவத்தினர்.

இதன் காரணமாக பலரும் பிரதான வீதிகளைப் பயன்படுத்துவதை தவிர்த்து ஒழுங்கைகள் ஊடாக பயணம் செய்து வருகின்றார்கள். இதையறிந்து தற்போது சங்கானை டச்சு வீதியிலும் இராணுவத்தினர் நின்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அந்த வீதியால் செல்லும் மக்கள் அவ்வப்போது தாக்கப்படுகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


இராணுவத்தினர் விபரம் பெற்ற பின்னரே

யாழ்ப்பாணத்தில் பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களது குடும்ப விபரங்கள், ஆதரிக்கும் கட்சி, தொலைபேசி இலக்கம், கல்வித்தகமை, தொழில் போன்ற விபரங்களை அண்மையில் இராணுவத்தினர் பெற்ற பின்னரே மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சட்டத்தரனிகளுக்கு அச்சுறுத்தல்கள் விடப்படுகின்றன என்றும் -

கப்பம் கேட்டல் மற்றும் கொலைப் பயமுறுத்தல் விடுத்தல் போன்ற நடவடிக்கைகள் இடம் பெறுவதாகவும் - பரவலாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ். மாவட்ட சட்டத்தரனிகள் கடந்த வாரம் தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டார்கள். எனினும் இவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் நீதிமன்றக் கடமைக்குத் திரும்பியுள்ளனர். இருந்தபோதிலும் தமக்கு எந்தநேரமும் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற ஆதங்கத்துடனேயே அவர்கள் இருக்கிறார்கள்.

Monday, September 24, 2007

உலக சமாதான தின நிகழ்வு


யாழ். செயற்பாட்டு மையத்தினால் உலக சமாதான தினமான செப்டெம்பர் 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சில நிகழ்வுகள் நடத்தப்பட்டன. செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகனின் சொற்பொழிவும் திருமறைக் கலாமன்றத்தினரின் நடன நிகழ்வும் பிரபல இசைக் கலைஞரும் விரிவுரையாளருமான த.றொபேட்டின் அமைதி இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன. மல்லாகம் மாவட்ட நீதிபதி சரோஜினி இளங்கோவன் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மனித உரிமைகள் ஆனைக்குழுவில் இருவர் சரண்

மனித உரிமைகள் அலுவலகத்தில் மேலும் இருவர் கடந்த 20ஆம் திகதி சரணடைந்துள்ளனர். தமது உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியே அவர்கள் சரண் அடைந்துள்ளார்கள் மீசாலையைச் சேர்ந்த 33 வயதான குடும்பஸ்தர் ஒருவரும் கொக்குவிலைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருமே சரணடைந்தவர்களாவர்.

இராணுவப் பலனாய்வாளர்கள் மற்றும் ஆயுதக் குழுவினர் ஆகியோரின் அச்சுறுத்தல் காரணமாக அண்மைக்காலமாகப் பொதுமக்கள் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் சரணடைந்து வருகின்றார்கள். உலகில் எங்கும் இல்லாத வகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சரணடைந்த இருவரும் மனித உரிமைகள் ஆனைக்குழ அலுவலகத்தினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தி;ன் முன்நிறுத்திய பொலிஸார் சிறையில் அடைத்தனர்.

Saturday, September 15, 2007

ஊரடங்கு தளர்வு ஆனால் மக்கள் நடமாட்டம் இல்லை

யாழ். குடாநாட்டுக்கான இரவு நேர ஊரடங்குச் சட்டம் மேலும் மூன்று மணித்தியாலங்களினால் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் குடாநாட்டு மக்கள் இரவு நேரத்தில் நடமாடுவதைத் தவிர்த்து வருகிறார்கள்.

இரவு நேரத்தில் நடமாடினால் வழியில் ஏதாவது நடந்துவிடலாம் என்ற அச்சம் நிலவுவதே இதற்குக் காரணம் என்று பொதுமக்கள் கூறுகின்றனர். ஆட்கடத்தல்கள், இனம்தெரியாதவர்கள் என்ற பெயரில் இடம்பெறும் கொலைகள் போன்ற காரணங்களினால் மக்கள் இரவில் நடமாடுவதற்கு மக்கள் பயப்படுகின்றனர்.

வீடுகளில் அத்து மிறிப் பிரவேசிக்கும் படையினர்

சுன்னாகம் பகுதிகளில் இரவு நேரத்தில் படையினர் வீடுகளுக்குள் அத்துமீறிப் பிரவேசித்து வருகின்றனர் என அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீட்டின் பூட்டிய கதவுகளை உடைத்தும் மற்றும் மதில்களின் மேலாகப் பாய்ந்தும் வரும் இராணுவத்தினரால் இருவு நேரத்தில் பொது மக்கள் அச்சத்துடனேயே வாழும் நிலைமை காணப்படுகின்றது.
இவர்கள் இரவு வேளைகளில் வாகனங்கள் மற்றும் உந்துருளிகளைப் பொதுமக்களிடமிருந்து கேட்கின்றனர் எனவும் கொடுக்க மறுப்பவர்களைப் பயமுறுத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. புடையினரின் இவ்வாறான நடவடிக்கைகளினால் திருடர்களும் விடுகளுக்குள் படையினர் போன்றே நுழைந்து திருடிச் செல்லும் நிலமையும் அதிகரித்திருக்கின்றது.

கள்ளு விற்பனை நிலையத்தில் சாராயம் விற்றதற்கு தண்டம்

(ஹம்சப்பிரியா)

அனுமதிப்பத்திரம் பெறாது கள்ளு விற்பனை நிலையத்தில் அரச சாராயத்தை விற்பனை செய்த தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம் மற்றும் சுன்னாகம் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்திற்கம் என்பவற்றிற்கு மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் தலா ஜம்பதாயிரம் ரூபா தண்டம் வித்திதது.

தெல்லிப்பளை பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த இரண்டு சங்கங்களும் அனுமதிப்பத்திரம் இன்றி சாராயம் விற்பனை செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது இரு சங்கங்களின் பிரதிநிதிகளும் குற்றத்தை ஒப்பக் கொண்டனர். வலிகாமம் பகுதியில் கடந்த சில வாரங்களாகப் பொலிஸார் சட்டவிரோத மது விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கையெடுத்து வருகின்றனர்.

Monday, September 10, 2007

அமைதியாக நடந்த நல்லூர் கந்தசாமி கோயில் தேர்திருவிழா

நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. யாழ். குடாநாட்டில் கடந்த பல மாதங்களாகக் காணப்பட்ட ஊரடங்குச் சட்டம் நேற்றைய தினம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து; மக்கள் நேரத்துடன் ஆலயத்திற்க்கு வந்து திருவிழாவில் கலந்துகொண்டார்கள்.

அதிகாலையில் இடம்பெற்ற பள்ளியறைப் பூசையைத் தொடர்ந்து காலை 6.00 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் நடந்தது. அதனைத் தொடர்ந்து 7.00 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்தார். பக்தர்களின் பலத்த வேண்டுதல்களுக்கு மத்தியில் அடியார்களினால் தேர் இழுக்கப்பட்டது.

குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் முச்சக்கர வண்டிகள் யாழ்ப்பாணம் போக்குவரத்துச் சபையின் பேருந்துகள், சிற்றூர்திகள், என்பன காலை முதல் சேவையில் ஈடுபட்டு இருந்தன. தொடாச்சியாக அடியவர்கள் வருகை தந்து உடன் ஆலய சுற்றாடலில் இருந்தும் தமது வீடுகளுக்கு திரும்பிச் சென்றதையும் அவதானிகக முடிந்தது.

ஆலயத்தில் பல நூற்றுக்ககணக்கானவர்கள் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டதுடன் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நீணட ஆயுள் வெண்டி நேர்த்திகளை நிறை வேற்றியதையும் காணமுடிந்தது.

குடிசன கணக்கெடுப்பு நிறுத்தம்

யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட குடிசன கணக்கெடுப்பு பணிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பணியில் ஈடுபடுவதற்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் உரிய காகிதாதிகள் என்பன வழங்கப்பட்ட நிலையில் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இந்தப் பணி நிறுத்தப்பட்டமைக்கான சரியான காரணம் எதுவும் யாருக்கும் தெரிய வரவில்லை. ஆனாலும் பணியில் ஈடுபட்டவர்களிடம் இருந்த உரிய காகதாதிகளை மீளக் கையளிக்கும்படி பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளதாக இப்பயிற்சி வகுப்புக்கச் சென்று கடமையை ஆரம்பித்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

விசேட அடையாள அட்டைப் பதிவுகள் மீண்டும் ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் படையினரால் ஆரம்பிக்கப்பட்ட விசேட அடையாள அட்டைக்கான பதிவுகள் இடைநிறுத்தப்பட்டிருந்த பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக விசேட அடையாள அட்டைக்கான பதிவுகள் திடீரென படைத்தரப்பினரால் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் பதிவுகள் மேற்கொள்ளும் பணிகள் கிராம அலுவலர்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புதிய படங்களுடன் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி இராணுவத்தினர் தெரிவித்ததன் பெயரில் கிராம அலுவலர்களினால் இந்நடவடிக்கை மேற் கொள்ளப்படுகின்றது.

இதேவேளை சில பகுதிகளில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று பதிவுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். தென்மராட்சி, தீவகம், வடமராட்சிப் பகுதிகளிலும் இந் நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் இடம் பெறலாம் எனத் தெரியவருகின்றது.

உரிய படிவங்கள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டதைத் தொடாந்து இந்நடவடிக்கை இடம்பெறத் தொடங்கியுள்ளது.

Friday, September 7, 2007

விசேட அடையயாள அட்டை வழங்கும் பணி தற்காலி நிறுத்தம்.

கடந்த சில வாரங்களாக யாழ். குடாநாட்டு மக்களுக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்கவதற்கான நடவடிக்கைகளில் யாழ். மாவட்ட படைகள் மும்மரமாக ஈடுபட்டு வந்தன. தற்போது இந்த விசேட அடையாள அட்டையை வழங்குவதில் படைத்தரப்புக்கு இடையே பெரும் குழப்பமான நிலமை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டதில் நிலை கொண்டுள்ள படையணிகள் பலவும் தக்கு தெரிந்தவாறு இந்த நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம் ஒரு கட்டமைப்பு அற்ற நிலமை காணப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்தாக தெரியவருகின்றது.

இதேவேளை ஏற்கனவே பல லட்சக்கணக்கான மக்கள் புகைப்படங்கள் எடுத்து இராணுவ முகாம்களில் பல மணித்தியாலங்கள் காத்திருந்து புகைப்படங்களை கையளித்தவிட்டு வந்துள்ளார்கள். இவர்களுக்குக் குறிப்பி;ட்ட விசேட அடையாள அட்டைக்கான படிவங்கள் வழங்கப்பட்டமைக்கான எந்தவொரு அத்தாட்சிக் கடிதங்களும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிட்டத்தக்கதாகும்.

குடிசன மதிப்பீட்டு நடவடிக்கை ஆரம்பம்

யாழ். மாவட்டத்தில் குடிசன மதிப்பீடு எடுக்கும் பணிகள் மிகவம் மும்மரமாக முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு ஒழுங்கற்ற முறையில் இந்த செயல்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பி;டத்தக்கதாகும்.கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்தப் பணிகளை முன்னெடுப்பதில் குறிப்பிட்ட சில பிரதேச செயலாளர்கள் உதவி அரசாங்க அதிபர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கதாகும்.

ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ள நிலமையில் இந்த குடிசன மதிப்பீடு என்பது திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களின் வாழ்வியலை அழிக்கும் நோக்கமாக அரசு இதனை மேற்கொண்டுள்ளதாக பொது அமைப்புகளும் கல்வியளார்களும் குற்றஞ்சாட்டுகின்றார்கள்.

தமிழ் மக்களுடைய வாழ்வியலை பல்வேறு வழிகளிலும் சிதைத்துவரும் அரசாங்கம் மற்றும் படைத்தரப்பினரும் அரச உயர் அதிகாரிகளும் இந்த படுபாதகமான செயலில் ஈடுபட்டுள்ளனர். தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் முயற்சிக்காக இதனை அவர்கள் இணைந்து மேற்கொள்வதாகப் பலரும் தெரிவிக்கின்றார்கள்.

மீண்டும் மீண்டும் கசிப்பு விற்றவர் சிறையில்

கசிப்பு விற்ற குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டு தண்டப்பணம் கட்டிய மூன்றே மணிநேரத்தில் மீண்டும் குறிப்பிட்ட நபர் ஒருவரும் மற்றும் இருவரும் பெரும் தொகையான கசிப்பை ஆட்டோவில் எடுத்துச் சென்றபோது மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கசிப்பு விற்ற குற்றச்சாட்டில் அச்சுவேலியைச் சேர்ந்தவரான மயில் வாகணம் ஞானசேகரன் என்பவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மல்லாகம் மாவட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர் 15 ஆயிரம் ரூபா தண்டமாக கட்டிவிட்டுச் சென்றார்.

நீதிமன்றத்தை விட்டு வெளியேறிய சுமார் மூன்று மணிநேரத்தில் மேலும் இரண்டு நபர்களுடன் இனைந்து 45 போத்தில் கசிப்பை ஆட்டோவில் எடுத்துச்சென்ற போது சுன்னாகம் பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டு மல்லாகம் மாவட்ட நிதிமன்ற நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன் முன்னிலையில் நிறுத்தப்பட்டார். குற்றத்தை மூவரும் ஒப்புக் கொண்டார்கள்.

இதனைத் தொடாந்து 1ம் 3ம் குற்றவாளிகளான அச்சுவேலியைச் சண்முகம் ஸ்ரீதர், அன்னராசா குணேஸ்வரன் ஆகியோருக்கு 40 ஆயிரம் ருபா தண்டம் அல்லது 15 மாதா சிறைத்தண்டனையும் மற்றைய 2ம் குற்றவாளிக்கு 70 அயிரம் ரூபா தண்டம் அல்லது 21 மாத சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

குறிப்பி;ட மூவரும் உரிய தண்டப் பணத்தைச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.

திருட்டு மினசாரம் பெற்றவர்களுக்கு தண்டனை

திருட்டு மின்சாரம் பெற்ற ஒன்பது பேரிடம் இருந்து தண்டப் பணமாக ஒரு லட்சத்தி முப்பத்தையாயிரம் ரூபா அறவிடப்பட்டுள்ளது மல்லாகம் நீதிமன்றம். தண்டம் கட்டத் தவறியவர்களுக்கு ஒருவருக்கு ஆறு மாதகால சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் இரவு காவல் கடமையில் ஈடுபட்ட பொலிஸார் திருட்டு மின்சாரம் பெற்றவர்களைக் கண்டுபிடித்து மல்லாகம் மாவட்ட நீதிபதி திருமதி சறோஜினி இளங்கோவன் முன்னிலையில் நிறுத்தினர். சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து பத்துப் பேருக்கும் தலா பதினைந்தாயிரம் ரூபா தண்டமாக விதிக்கப்பட்டது. பணத்தை கட்டத் தவறின் ஆறு மாதகால சிறைத் தண்டனையெனவும் தீர்ப்பளிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கப்பட்டவர்களில் சுன்னாகத்தை சேர்ந்த கண்ணன் துரைihசா, அகஸ்ரின் யோகநாதன், நாகலிங்கம் பாலகிருஸ்னன், கந்தையா இராசதுரை, கந்தசாமி சுரேஸ்குமார், கிருஸ்ணபிள்ளை சிவகுமார், மாரிமுத்து யோகராசா மற்றும் பெண்களான திருமதிகள் வரதராஜா வரதராணி, சிவஞானம் றெஜினாமணி ஆகியோர் தண்டப் பணத்தை செலுத்தினர். நாமுத்து இரத்தினசிங்கம் குறிப்பிட்ட பணத்தைக் கட்டத் தவறியமையால் ஆறு மாத சிறைத் தண்டனைக்காக சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Wednesday, September 5, 2007

இரத்ததான நிகழ்வு


யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவிவரும் இரத்த தட்டுப்பாட்டின் காரணமாக இரத்தம் வழங்கும் நிகழ்வு மல்லாகத்தில் இடம்பெற்றது.
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 14 வலயத்தினதும் மற்றும் மானிப்பாய் வட்ட லயன்ஸ் கழகம் மல்லாகம் தெல்லிப்பழை லயன்ஸ் கழகம் புனித சதாசகாய மாதா இளைஞர் ஒன்றியம் என்பன இனைந்து இரத்தம் வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டன.


மல்லாகம் புனித சதா சகாய மாதா ஆலுய வளாகத்தில் இடம்பெற்ற இரத்தம் வழங்கும் நிகழ்வில் பலர் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினார்கள். மல்லாகம் பங்குத் தந்தை அருட்திரு கஸ்போர் அடிகளாhர் உரிய ஏற்பாடுகளை செய்திருந்தார்.

ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் வெற்றி

யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக இடம்பெற்ற ஜந்து பேர் பங்கு பற்றும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஏழாலை ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வுட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் 75வது நிறைவு விழாவையொட்டி இடம் பெற்ற பவள விழா நிகழ்வுக்காக இந்த உதைபந்தாட்டப் போட்டி முதல் தடவையாக நடத்தப்பட்டது
வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கைச் சேர்ந்த ஏழாலை மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக் கழகமும் மானிப்பாய் றெட்றேஞ்சர் விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.


முதல் பாதி ஆட்ட நிறைவில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களைப் பெற்றன. இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடாந்து இரு அணிகளும் விடாமுயற்சியுடன் விளையாடியதன் மூலம் இரு ஆணிகளும் மாறி மாறி கோல்களைப் பெற்று மேலும் மூன்று கோல்களைப் பெற்று தலா நாலு கோலகள் என்ற நிலையில் ஆட்டம் நிறைவு பெற்றது.


வெற்றி தோல்வியை திர்மானிப்பதற்காக மேலும் பத்து நிமிடங்கள் வழங்கப்பட்ட போதிலும் இரு அணிகளும் கோல்கள் எதனையும் பெற்றுக் கொள்ளவில்லை. இந் நிலமையில் சம நிலை உடைப்பு உதைகள் மூன்று வழங்கப்பட்டன.


இதில் ஞானமுருகன் விளையாட்டக் கழகம் 03 உதைகளையும் பயன்படுத்தி கோல்களைப் பேற்றுக் கொண்ட போதிலும் றெட் றேஞ்சர் விளையாட்டக்கழக வீரர் ஒரு உதையை வீணாக்கியமையால ஞானமுருகன் விளையாட்டுக் கழகம் 07க்கு 05 என்ற கோல்களினால் வெற்றி பெற்று பவள விழாக் கிண்ணத்தை சுவீகரித்தது.


யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.

மாட்டு வண்டில் சவாரிப் போட்டி

நீண்ட கால இடைவெளியின் பின்னர் சுன்னாகம் கந்தரோடை சவாரித்திடலில் மாட்டு வண்டி சவாரி இடம்பெற்றுள்ளன. ஆளவவெட்டி மேற்கு கலைமகள் சன சமூக நிலையத்தின் எற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சவாரி மாடுகள் கலந்துகொண்டன.



'சி' பிரிவில் 11 வண்டில்களும் 'பி' பிரிவில் 14 வண்டில்களும் 'எ' பிரிவில் 08 வண்டில்களுமாக மொத்தம் 33 வண்டிகள் கலந்து கொண்டன.
'சி' பிரிவில் 1ம் இடத்தை மல்லாகத்தைச் சேர்ந்த சிறிலக்சனும் 2ம் இடத்தை புன்னாலைக் கட்டுவனைச் சேர்ந்த ராஜ்கினும் 3ம் இடத்தை மானிப்பாயைச் சேர்ந்த செல்வரத்தினமும் பெற்றுக் கொண்டார்கள்.



'பி' பிரிவில் முதலாம் இடத்தை மாதகல் பிரான்பற்றைச் சேர்ந்த ஆனந்தராசாவும் 2ம் இடத்தை அளவெட்டியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளையும் 3ம் இடத்தை திருநெல்வேலியைச் சேர்ந்த சசிகுமாரும் பெற்றுக் கொண்டார்கள்.



'எ' பிரிவில் 1ம் இடத்தை அளவெட்டியைச் சேர்ந்த சிவஞானமும் 2ம் இடத்தை அச்செழுவைச்சேர்ந்த செல்வரத்தினமும் 3ம் இடத்தை வட்டுக்கோட்டையைச் சேர்ந்த மகாலிங்கமும் பெற்றுக்கொண்டார்கள்.
இப் போட்டிகள் சனசமூக நிலையத் தலைவர் க.உதயகுமார் தலைமையில் இடம் பெற்றன.

Friday, August 31, 2007

விசேட அடையாள அட்டைபெற பொதுமக்களை வலியுறுத்துகிறது இராணுவம்

இரு வாரத்தில் சுமார் நான்கு இலட்சம் மக்களை விசேட அடையாள அட்டை பெற வேண்டும் என யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவம் நச்சரித்து வருகின்றது. இது தொடர்பாக மக்களுக்ககு எச்சரிக்கையுடன் கூடிய வற்புறத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடும்ப அட்டை பெறவேண்டும் என இராணுவம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சுமார் நூறு ரூபா வரை செலவிட்டு குடும்ப அட்டை பெற்று வருகின்றனர். அந்த நடவடிக்கை முடியும் முன்னர் மீண்டும் விசேட அடையாள அட்டையை பெற வெண்டும் என இராணுவத்தினர் பணித்துள்ளார்கள்.

தொழில் இழந்து சிரமப்பட்டுக் கொண்டு அரச நிவாரணத்திற்க்கு கையேந்தி நிற்கும் மக்களைத் தொடர்ந்தும் பணச்செலவு செய்ய இராணுவம் தூண்டி வருவதானது மனிதாபிமானமற்ற் செயல் எனப் பலரும் கூறுகின்றார்கள்.

ஹென்றியரசர் நூற்றாண்டு விழா போட்டி: ஏழாலை ஞான முருகன் அணி வெற்றி

யாழ்ப்பாணம் இளவாலை புனித கென்றியரசர் கல்லூரி நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் முகமாக இளவாலை யங் கென்றிசியன் விளையாட்டுக் கழகம் நடத்திய நூற்றாண்டு விழா நினைவுக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஏழாலை ஞான முருகன் விளையாட்டுக் கழகம் சம்பியனாகியது.

புனித கென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இறுதிப் போட்டியில் ஏழாலை மயிலங்காடு ஞான முருகன் விளையாட்டுக் கழகமும் யாழ்ப்பாணம் பாடும் மீன் விளையாட்டுக் கழகமும் மோதின.
முதல் பாhதி ஆட்டத்தின்போது ஞான முருகன் விளையாட்டுக் கழகம் ஒரு கோலைப் பெற்ற போதிலும் அதனை மத்தியஸ்தர் பிழையான பக்கத்தில் நின்று பெற்ற கோல் எனத் தெரிவித்து மறுத்தார்.

இந் நிலமையில் முதல் பாதி ஆட்டம் கோல்கள் எதனையும் பெறாத நிலையில் ஆட்டம் முடிவடைந்தது. இரண்டாம் பாதி ஆட்டம் ஆரம்பமாகிய சில நிமிட இடைவேளையில் ஞான முருகன் விளையாட்டுக் கழகம் ஒரு கோலைப் பெற்று முன்னிலை பெற்றது.

இரு அணிகளும் தொடர்ந்து கோல்கள் பெறும் பெரு முயற்சியில் ஈடுபட்ட போதிலும் கோல்கள் எதனையும் பெறவில்லை. ஞான முருகன் விளையாட்டுக் கழகம் 01 - 00 என்ற கோல்கணக்கி;ல் வெற்றிபெற்று சம்பியனாகியது. நூற்றாண்டு விழா சுற்றுக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.

Wednesday, August 29, 2007

பாழ்பட்டுப் போகின்றது யாழ்ப்பாணம்: இராணுவ உதிவியுடன் தறிக்கப்படும் மரங்கள்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி ஓரங்களில் உள்ள பழைமை வாய்ந்த மரங்கள் தறித்து எடுத்துச் செல்லப்படுகின்றன. கடந்த சில நாட்களாக இந் நடவடிக்கையில் இராணுவத்தினருடன் இனைந்து இயங்கும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலத்தில் வீதியோரத்தில் உள்ள மரங்களின் கொப்புகள், வீட்டு வேலிகள் மற்றும் வீட்டு வளிவுகளில் உள்ள மரங்கள் எனப் பல பயன்தரு மரங்களும் பாதுகாப்புக் காரணங்களுக்காக இராணுவத்தினரின் பணிப்பின் பேரில் வெட்டப்பட்டன. அவைபோக எஞ்சியிருந்த வீதியோர மரங்களும் தற்போது தறிக்கப்படுகின்றன.

சுமார் 75 வருடங்களாக இந்த வீதியால் செல்வோருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருந்த மரங்களே தறித்து எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்தப் பழமையான இதனை தறிக்கப்படுவதைப் பல அரச உயர் அதிகாரிகள் பார்த்துக் கொண்டு செல்கின்றனர். எனினும் யாரும் அதற்கெதிராக நடவடிக்கையெடுக்காத பொறுப்பற்ற நிலமையே காணப்புடுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

இது சம்பந்தமாக பொது அமைப்புகள் உரிய அதிகாரிகளுக்கு முறையிட்டுள்ள போதிலும் அதற்கு யாரும் பொறுப்பான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தினருடன் இனைந்து குறிப்பி;ட்ட சிலர் பெறுமதிமிக்க மரங்களை தறித்து எடுத்துச் செல்வதற்கு மரக் கூட்டுத்தாபனத்தின் பொறுப்பான அதிகாரிகளும் உடந்தை என்று பொது அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

சிறுவனை நாய் கடித்த விவகாரம்: நீதிமன்றம் வரை சென்றுள்ளது

மலசலகூடத்தை பார்வையிட வீட்டிற்கு வந்த பொது சுகாதர பரிசோதகரை பாதுகாப்பாக வீதியைக் கடந்து விட்டு வந்த பத்து வயது சிறுவனை ஆத்திர முற்ற நாய் கடித்து குதறிய சம்பவம் தெல்லிப்பழைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனின் வீடிற்கு அருகிலுள்ள வீட்டில் வளர்க்கப்படும் நாய் வீதியில் நின்று போய் வருபவர்களைக் கடித்தும் விரட்டியும் வருவது வழமை. தமது வீட்டிற்கு வந்த காரணமாக பொது சுகாதார பரிசோதகரை அந்த நாய் கடித்துவிடக்கூடாது என்ற கவனத்தில் வீட்டிற்க்கு வெளியே வந்து நாயைக் கடந்து அவர் செல்ல குறிப்பிட்ட சிறுவன் உதவி செய்துள்ளான்.

இதனைப் பார்த்துக் கொண்டு இருந்த நாய் சிறுவன் திரும்பி வீட்டிற்க்கு வந்தபோது அவனைத் துரத்திக் கடித்துக் குதறியுள்ளது. சிறுவன் உடலின் பல இடங்களிலும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறிப்பிட்ட விவகாரம் பொலிசாரின் மூலம் நீதிமன்றத்திற்;கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Friday, August 24, 2007

குடும்பப் பதிவை விரைவுபடுத்தும் முயற்சியில் இராணுவம்

யாழ். குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடும்பப் பதிவை உடன் மேற்கொள்ளும்படி உடுவில் பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு இராணுவத்தினர் ஒலி பெருக்கி மூலம் அறிவித்துள்ளார்கள். நேற்று ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் இராணுவத்தினர் இந்த அறிவித்தலை விட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

சில நாட்களாக இந்த குடும்பப் பதிவு நடவடிக்கைகள் பரவலாக யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரின் பணிப்பின் பெயரில் கிராம அலுவலர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போதுதான் முதல் தடவையாக ஒலி பெருக்கி மூலம் படைத்தரப்பினர் இந்த குடும்பப் பதிவு சம்பந்தமான அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த அறிவித்தல் காரணமாக பொது மக்களிடத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இராணுவ வாகண விபத்து: இருவர் வைத்திய சாலையில்

இன்று காலை இராணுவ வாகணமும் உந்துருளியம்; மோதிக்கொண்டதில் உந்துருளியில் வந்த இருவர் காயங்களுக்கு உள்ளாகினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

காங்கேசன்துறை வீதி, சபாபதிப்பிள்ளை முகாம் வீதிக்கு அருகாமையில் காலை 7.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. அவ்வழியால் வந்த அரச வாகனம் ஒன்றை மறித்த இராணுவத்தினர் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கும்படி தெரிவித்து விட்டுச் சென்றுவிட்டார்கள்.

இராணுவத்தினரின் இத்தகைய நடவடிக்கையினால் குறிப்பி;ட்ட சாரதி மிகவும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டார். காயங்களுக்கு உள்ளாகியவர்களுக்கு எதாவது நடந்தால் பொறுப்பக் கூறும் நிலைமை தனக்கு ஏற்படும் என்ற அச்சத்தில் சற்றுப் பயந்த சாரதி, பின்னர் அவர்களை வைத்தியசாலையில் சேர்த்தார்.

Thursday, August 23, 2007

தெல்லிப்பழை துர்க்கையம்மன் திருவிழா



தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 07 ம் நாள் திருவிழாவின் போது சுவாமி வீதி உலாவரும் காட்சியைப் படத்தில் காணலாம்.

காவல்துறையால் குடும்பப் பதிவுகள் சேகரிப்பு

யாழ்ப்பாணத்தில் வாழும் அனைத்து மக்களினதும் குடும்பப் பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் யாழ். மாவட்ட காவல்துறையினரும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். கிராம அலுவலர் பிரிவு ரிதியாக விவரங்களைப் பதியும் நடவடிக்கை கிராம அலுவலர்களினால் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது சம்பந்தமான மாதிரிப் படிவங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாகக் குறிப்பிட்ட பகுதிக் காவல்துறையினரால் கிராம அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. சில பிரதேசங்களில் காவல்துறையினர் நேரடியாகக் கிராம அலுவலர்களை அழைத்து இது சம்பந்தமான விபரங்களை வழங்கி பதிவு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார்கள்.

இராணுவத்தினரால் புகைப்படங்களுடன் கூடிய குடும்பப் பதிவுகள் மேற்க்கொள்ளப்பட்டு வரும் நிலமையில் காவல்துறையினரும் இந்தப் பதிவுகளை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த காலத்தில் காவல்துறையினர் இந்தப் பதிவுகளை சேகரித்த போதிலும் இடையில் இந்தப் பணிகளை நிறுத்தியிருந்தார்கள்.

யாழ். குடாநாட்டில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையில் இத்தகைய பதிவுகளைப் பலரும் சேகரிப்பதையிட்டு பொது மக்களிடத்தில் பலத்த சந்தேகங்கள் தோன்றியுள்ளன.

யாழ். குடாநாட்டில் மீண்டும் விசேட அடையாள அட்டை

யாழ். குடாநாட்டு மக்களுக்கு இராணுவத்தினரால் மீண்டும் விசேட அடையள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இது சம்பந்தமான கலந்துரையாடல் ஒன்று யாழ். மாவட்ட படைகளின் உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உதவி அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் இடையே பலாலி படைத்தளத்தில் இடம் பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைப் படையினர் 1996ம் ஆண்டு கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு வசித்த மக்களுக்கு விசேட அடயாள அட்டைகள் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன. 12 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண், முதியவர்கள என்ற வேறுபாடுகள் இன்றி அனைவருக்கும் விசேட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

தற்போது மிண்டும் 10 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் புதிய விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பி;டத்தக்கதாகும்..
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்க்கும் இடையே இடம்பெற்ற சமாதான உடன்படிக்கையைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட இந்த நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது சம்பந்தமாக முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற் கொள்ளும் படி பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர்கள் ஆகியோர் கிராம அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.

அமைச்சர் வருகையால் நல்லூர் ஆலய சுற்றாடலில் பதற்றம்

இலங்கை அரசின் சமூக சேவைகள், சமூக நலத்துறை அமைச்சரும் ஈபிடிபி கட்சியின் பொதுச் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு மேற்கொண்ட விஜயம் காரணமாக அப் பகுதியில் பெரும் பதற்றமான நிலைமை காணப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை பகல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த hநல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்தார். அதையொட்டி பாதுகாப்புக் கெடுபிடிகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆலயத்திற்கு வருதை தந்திருந்த அடியவாகள் படைத்தரப்பினராலும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களினாலும் பலத்த துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

ஆலயச் சுற்றாடலில் உந்துருளிகளில் வந்தவர்கள் சோதனையென்ற பெயரில் அடியார்களை பலத்த கேள்விகளுக்கு உள்ளாக்கியதுடன் குறிப்பி;ட இடங்களில் நின்று வழிபடவும் அனுமதிக்காது விரட்டியுள்ளார்கள். இத்துடன் தேசிய அடையாள அட்டைகள் கேட்டும் தாம் பயமுறுத்தப்பட்டதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதேவேளை பலத்த பாதகாப்புடன் ஆலயத்திற்கு வருகை தந்த அமைச்சரின் கவச வாகனம் வீதித் தடைக்கு தொண்டர்கள் போட்டு இருந்த பாதுகாப்பு நிலைகளையும் உடைத்துக் கொண்டு உட்சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய செயல்பாடுகளினால் ஆலய சுற்றாடலில் பெரும் பதற்றமான நிலமை ஏற்பட்டது.

வலி. வடக்கில் தொடரும் இராணுவத்தினரின் பதற்றம்

யாழ்ப்பாணம், வலி. வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பதற்றமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். நேற்றைய தினம் பலாலி காங்கேசன்தறை மற்றும் மியிலிட்டிப் பகுதிகளில் வீழ்ந்து வெடித்த செல்களினால் இந்தப் பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் நேற்றைய தினம் பாலாலி படைத்தளத்தினுள் செல்கள் வீழ்ந்து வெடித்ததைத் தொடாந்து உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் உடனடியாகக் கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். க.பொ.த உயர்தரப் பரிட்சை இடம் பெற்றுக் கொண்டு இருக்கும் வேளையில் இராணுவத்தினர் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டமையால மாணவர்களின் கல்வி பாதிக்கும் துர்ப்பாக்கிய நிலமை ஏற்பட்டுள்ளது.

இதனைவிட நேற்றைய தினம் நகரின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவத்தினர், வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை மறித்துச் சோதனைகளை மேற்கொண்டனர். அடையாள அட்டைகளையும் பார்வையிட்டனர். தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய உற்சவம் முடிவடைந்து வீடகளுக்குத் திரும்பிய பக்தர்களிடமும் இராணுவத்தினா அடையாள அட்டைகளை கேட்டு சோதனை நடவடிக்கைகளை மேற் கொண்டமையால் அவர்கள் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளானார்கள்.

Tuesday, August 21, 2007

Only On JAFFNA News: செல் சத்தத்தால் அதிர்ந்தது யாழ்ப்பாணம்

http://www.eelampage.com/?cn=33107
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23056

செல் சத்தத்தால் அதிர்ந்தது யாழ்ப்பாணம்

செல் சத்தத்தினால் இன்று காலை யாழ். குடாநாடு கடும் அதிhவுக்கு உள்ளாகியது. வுன்னியில் உள்ள புலிகளின் பகுதியில் இருந்து ஏவப்பட்ட செல்கள் பலாலி படைத்தளத்தில் வீழ்ந்து வெடித்ததைத் தொடாந்து இந்த தாக்குதலை படைத் தரப்பினர் நடத்தினர்.

நூற்றுக்கணக்கில் வன்னியை நோக்கி செல்கள் ஏவப்பட்டன. காலை 8.45 மணியளவில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி இராணுவ முகாம் பகுதியில் திடீரென செல்கள் வீழ்ந்து வெடித்தன. எனினும் இதனால் ஏற்பட்ட சேதவிவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

வன்னியில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து சுமார் அரை மணித்தியாலங்களுக்கு மேலாக யாழ். குடாநாட்டில் இருந்து செல்கள் வன்னி நோக்கிப் பறந்தன. பலாலியில் இருந்து ஆட்லெறி மற்றும் பல் குழல் பீரங்கித் தாக்குதல்களும் இடம்பெற்றன. அது தவிர ஊரெழு தெல்லிப்பழை உடுவில் தென்மராட்சி முகாம்கள் வடமராட்சி முகாம்கள் என பல இடங்களில் இருந்தும் ஆட்லெறி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இருந்து பல்குழல் பீரங்கித்தாக்குதலும் இடம் பெற்றமையால் பொதுமக்கள் பெரும் பதற்றமடைந்தனர்.

இதேவேளை பலாலி படைத்தளத்தில் வீழ்ந்து வெடித்த செல்களினால் படைத்தரப்பினருக்குக் காயங்கள் எற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

Monday, August 20, 2007

ஒட்டுக்குழுவினர் சுட்டதில் வேலணை வர்த்தகர் பலி!

படையினருடன் செயல்படும் ஒட்டுக்குழுவினரின் துப்பாக்கிச்சூட்டில் வர்த்தகர் ஒருவர் பலியாகியுள்ளார். நன்பகல் 12.15 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள்.

வேனையைச் சேர்ந்த வர்த்தகரான கார்திகேசு இராஜரெட்னம் (53) என்பவரே பலியானவராவார். இவர் தனது வர்த்தக நிலையத்தில் கடமையில் இருந்தவேளை இவர் மீது துப்பாக்கிப்பிரயோகம்; மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவேளையில் கடற்படையினர் நடமாட்டம் மற்றும் காவல் நடவடிக்கைகள் அப்பகுதியில் காணப்பட்டதாகவும் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் மிகவும் சுதந்திரமான முறையில் கடற்படையினரின் முகாம் நோக்கிச் சென்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மிகவும் இறுக்கமான முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ள கடற்படைக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்தக் கொலையை ஈ.பி.டி.பி. மற்றும் கடற்படையினர் ஆகியோரே செய்யமுடியும் எனவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஊர்காவற்துறைப் பொலிசார் உடன் விகாரனையை மேற்கொண்டுள்ளதுடன் குறிப்பட்ட இடத்திற்க்குச் சென்ற ஊர்காவற்துறை மாவட்ட நீதிபதி மரண விசாரனையை மேற் கொண்டார். அதைத் தொடாந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஊர்காவற்துறைப் பொலிசாரினால் ஓப்படைக்கப்பட்டது.

Friday, August 17, 2007

சிறுவன் கடத்தல்

மோட்டார் சைக்கிளில் வந்த இராணுவப் புலனாய்வாளர்கள் வீட்டில் இருந்த பதினான்கு வயதுச் சிறுவனைக் கடத்திச் சென்றுள்ள சம்பவம் உரும்பிராய்ப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கடத்தப்பட்ட மாணவன் உரும்பிராய் கற்பகப் பிளளையார் ஆலயத்திற்கு அருகில் இருக்கும் உரும்பிராய் சைவத் திமிழ் வித்தியாலயத்தில் ஆண்டு 08இல் கல்வி கற்கும் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மாணவனைக் கடத்தியவர்கள் குறிப்பிட்ட வீட்டில் நுழைந்து ஆயுதங்களுடன் தேடுதல் நடத்தியனர் எனவும் கூட்டி வந்தவரிடம் ஏதோ கேட்டுவிட்டு குறிப்பிட்ட சிறுவனைக் கடத்திச் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்டத்தில் காணப்படும் சிறுவர் அமைபுக்களும் கூட வாய் மூடி மௌனிகளாக இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இனம்தொயாதவரின் சடலம் வைத்தியசாலையில்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இனம்தெரியாத ஒருவரின் சடலம் கோப்பாய் பொலிசாரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு இவர் இனம் தொயாதவர்களின் துப்பாக்கிச்சூட்டிற்கு உள்ளாகியிருக்கலாம் எனத் தெரிவித்து வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளளது.

தலையில் துப்பாக்கிச்சூட்டுக் காயம் இருந்ததுடன் உடலிலும் காயங்கள் காணப்படுகின்றன. குறிப்பட்டவர் நீலக் கோடு போட்ட சாரம் அணிந்திருந்தார். அது புதிய சாரமாகவும் காணப்படுகின்றது. சிவப்பு கறுப்பு கோடுகளுடன் கூடிய சேட்டும் சடலத்தில் காணப்படுகின்றது.

உரும்பிராயில் ஒருவரைக் காணவில்லை

உரும்பிராய் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணி முதல் 22 வயது நிரம்பிய இளைஞர் ஒருவர் இனம் தெரியாதவர்களினால் கடத்தப்பட்டார் என யாழ். மனித உரிமைகள் ஆணைக் குழுவில் அவரது சகோதரியினால் முறையிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்டவர் தென்மராட்சியில் இருந்து வந்து உரும்பிராய் பகுதியில் தங்கியிருந்து மேசன் வேலைக்குச் சென்று வந்தார் எனவும் இவரை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கடத்திச் சென்று விட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்தப்பட்டதாக தெரிவிக்கபட்டவர் இ.நிருபன் வயத 22 என அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருவர் மனித உரிமைகள் ஆனைக்குழவில் சரண்

யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று இருவர் சரண் அடைந்துள்ளார்கள். தென்மராட்சி மறவன்புலவில் இருந்து வந்து மேசன் வேலைக்காக உரும்பிராயில் தங்கியிருந்த 23 வயதான இ.கிருஸ்ணகுமார் என்பவரும் மற்றும் 30 வயது நிரம்பிய குடும்பஸ்தர் ஒருவருமே சரணடைந்துள்ளவாகளாவர்.

வியாழக்கிழமை அதிகாலையில் மோட்டார்சைகிளில் வந்த இனம்தெரியாதவர்களினால் விரட்டப்பட்டார் எனவும் தனது தேசிய அடையாள அட்டையை குறிப்பிடவர்கள் எடுத்துச் சென்றவிட்டார்கள் என்பதினாலும் இவர் மனித உரிமைகள் ஆனைக்குழவில் சரணடைந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையானவர் கடந்த வாரம் தச்சன்தோப்பில் இடம்பெற்ற கிளைமோர்த் தாதக்குதலைத் தொடாந்து தாக்கப்பட்டார். அதை அடுத்து யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருடைய தேசிய அடையாள அட்டையையும் இனம்தெரியாதவர்கள் பறித்துச் சென்றுள்ளமையால் இவர் வைத்தியசாலையில் இருந்து நேரடியாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சரணடைந்துள்ளார்.

Thursday, August 16, 2007

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரிக்கு முன்னாள் இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். குருநகர் இராஜசிங்கம் வீதியைச் சேர்ந்த கே. தேவராசா என்ற யாழ்ப்பாணம் மாநகரசபை சுகாதரா ஊழியர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவராவார்.

காலையில் வீட்டில் இருந்து கடமைக்கு வரும் வழியில் இவர் மீது மோட்டார் சையிக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள். யாழ். மாவட்ட நீதிவான் விசாரனை மேற்கொண்டதைத் தொடாந்து சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொலிசாரினால் ஒப்படைக்கபட்டது.

இதேநேரம் பகல் 11.00 மணியளவில் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள சத்திரத்துச்சந்திக்கு அண்மைக் கடை ஊழியர் ஒருவர் மீது இனம் தெரியாதவாகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்கள் படுகாயமுற்ற நிலையில் யாழ்;பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உள்ளாகியுள்ளவர் சின்னராசா விஜயசிங்கம் 30 வயது வேலனை 06ம் வட்டாரத்தைச் சேர்ந்தவராவார்.

கைதடியில் வீடு தீவைக்கப்பட்டுள்ளது.

கைதடிப் பகுதியில் தனிமையில் வாழந்தவரின் வீடு இன்ற பகல் 11.00 மணியளவில் வீட்டிற்க்கு மோட்டார் சையிக்கிளில் வந்த இனம் தெரியாதவர்களினால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக யாழ்ப்பாணம் மனித உரிமைள் ஆனைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டில் ஏற்க்கனவே தனது வீட்டிற்கு ஆயுதங்களுடன் வருகை தந்தவர்கள் வீட்டின் கதவுகளை உடைத்து தன்னிடம் நின்ற மோட்டார் சையிக்கிளை திருடிச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

மனித உரிமைகள் ஆனைக்குழுவில் மூவர் சரண்

கைதடி கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்த மூவர் இன்று பகல் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக சரணடைந்துள்ளார்கள்.

கோப்பாயைச் சேர்ந்த இளம் குடம்பஸதர் ஒருவரும் மற்றும் 30 வயதான கைதடியைச்சேர்ந்த இளம் குடும்பஸ்தர் மற்றும் தனிமையில் வாழ்ந்த 48 வயதானவருமே இன்று மனித உரிமைகள் ஆனைக்குழுவில் சரணடைந்துள்ளவாகள். ஏற்கனவே இவர்களுடைய வீடுகளுக்குச் சென்ற இராணுவத்தினர் வீடுகளை சோதனையிட்டுவிட்டு தேசிய அடையாள அட்டைகளை பெற்றுச் சென்றதாகவும் அதனைத் தொடர்ந்து இவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடப்பட்டதைத் தொடர்ந்து இவர்கள் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் சரணடைந்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் மூலம் யாழ் நீதிமன்றில் உரியவர்கள் சமர்ப்பிக்ப்பட்டடு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

தைடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி!

இன்று பகல் தைடியில் இடம் பெற்ற இனம் தெரியாதவாகளின் துப்பாக்கிச் சூட்டில் ஓய்வு பெற்ற கிராம அலுவலர் உட்பட இருவர் பலியாகியுள்ளார்கள்.

இன்று காலையில் கைதடிச்சந்தியில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் தம்பையா சந்திர மோகன் வயது 28 என்பவர் பலியாகியுள்ளார் இவருடைய சடலம் சாவகச்சேரி நீதவானின் விசாரனையைத் தொடாந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளது. பகல் 11.00 மணியளவில் ஓய்வுபெற்ற கிராம அலுவலரான க.செல்லையா வயது 65 என்பவர் வீட்டில் வைத்து இனம் தெரியாதவாகளின் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியாகியுள்ளார். இவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைதடி கிழக்கில் இடம்பெற்ற துப்பர்கிப் பிரயோகத்தில் ஐயதாஸ் ரூபன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை படுகொலை செய்யப்ட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சிவில் உடையில் மோட்டார் சையிக்கிளில் வந்த இராணுவப் புலனாய்வாளர்கள் நால்வர் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்கள இந்த சம்பவங்கள் இடம்பெற்ற வேளையில் இந்தப் பகுதியில் இராணுவத்தினரின் நடமாட்டம் காணப்பட்டதாகும் தெரிவிக்கப்படுகின்றது.