மனித உரிமைகள் அலுவலகத்தில் மேலும் இருவர் கடந்த 20ஆம் திகதி சரணடைந்துள்ளனர். தமது உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியே அவர்கள் சரண் அடைந்துள்ளார்கள் மீசாலையைச் சேர்ந்த 33 வயதான குடும்பஸ்தர் ஒருவரும் கொக்குவிலைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவருமே சரணடைந்தவர்களாவர்.
இராணுவப் பலனாய்வாளர்கள் மற்றும் ஆயுதக் குழுவினர் ஆகியோரின் அச்சுறுத்தல் காரணமாக அண்மைக்காலமாகப் பொதுமக்கள் மனித உரிமைகள் ஆனைக்குழுவில் சரணடைந்து வருகின்றார்கள். உலகில் எங்கும் இல்லாத வகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சரணடைந்த இருவரும் மனித உரிமைகள் ஆனைக்குழ அலுவலகத்தினால் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை நீதிமன்றத்தி;ன் முன்நிறுத்திய பொலிஸார் சிறையில் அடைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment