Monday, September 24, 2007

உலக சமாதான தின நிகழ்வு


யாழ். செயற்பாட்டு மையத்தினால் உலக சமாதான தினமான செப்டெம்பர் 21ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சில நிகழ்வுகள் நடத்தப்பட்டன. செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகனின் சொற்பொழிவும் திருமறைக் கலாமன்றத்தினரின் நடன நிகழ்வும் பிரபல இசைக் கலைஞரும் விரிவுரையாளருமான த.றொபேட்டின் அமைதி இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றன. மல்லாகம் மாவட்ட நீதிபதி சரோஜினி இளங்கோவன் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

No comments: